News August 8, 2024

பொதுவிநியோகத்திட்ட குறைதீர் முகாம்

image

கடலுார் மாவட்டத்தில், மாதந்தோறும் நடத்தப்படும் பொதுவிநியோகத்திட்ட குறைதீர் முகாம் 10.8.2024 அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், விருத்தாசலம், காட்டுமன்னார்கோயில், புவனகிரி, திட்டக்குடி, வேப்பூர், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய தாலுகா அலுவலகங்களில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 17, 2025

கடலூர்: சொந்த ஊரில் தொழில் தொடங்க வாய்ப்பு!

image

PMFME எனும் திட்டம் மூலம் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க அரசு சார்பில், ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கபடுகிறது. இதன் மூலம், இளைஞர்கள் உணவுப் பதப்படுத்துதல், ஊறுகாய் தயாரித்தல், எண்ணெய் மில் மற்றும் பால் பண்ணை அமைத்தல் போன்ற தொழில்களை தொடங்கலாம். இதற்கு உங்கள் அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது tnagrisnet.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். SHARE NOW!

News December 17, 2025

கடலூர் மாவட்டத்தின் நாளைய பவர் கட் விபரம்

image

கடலூர் மாவட்டத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் நாளை (டிச.18) பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்பட உள்ளது. இதனால் சித்தரச்சூர், மேல்பட்டாம்பாக்கம், மணலுார், பண்ருட்டி கிராம பகுதி, திருவாமூர், அண்ணாகிராமம், கண்டரக்கோட்டை, புதுப்பேட்டை, கோ.பூவனூர், ஆலடி, கீழ்கவரப்பட்டு, கோழிப்பாக்கம், கொங்கராயனூர், ஏ. கே. பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

News December 17, 2025

கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மொழித்தொண்டு, கலை, அறிவியல், கலாச்சாரம், பத்திரிக்கை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மகளிருக்கு சர்வதேச மகளிர் தினத்தன்று (மார்ச் 8) ஆண்டுதோறும் ஔவையார் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தகுதிவாய்ந்த மகளிர் கடலூர் மாவட்ட சமூகநலத்துறை அலுவலகத்தில் வரும் 10.1.2026-க்குள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!