News August 8, 2024
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலுர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Similar News
News September 18, 2025
FLASH: ஏற்றத்தில் முடிந்த இந்திய பங்குச்சந்தைகள்!

பங்குச்சந்தைகள் இன்று(செப்.18) ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. சென்செக்ஸ் 320 புள்ளிகள் உயர்ந்து 83,013 புள்ளிகளிலும், நிஃப்டி 93 புள்ளிகள் உயர்ந்து 25,423 புள்ளிகளிலும் வர்த்தகத்தை முடித்துள்ளன. HDFC Bank, Infosys, Reliance, ICICI Bank, Maruti Suzuki உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபத்தை கொடுத்துள்ளன. நீங்கள் வாங்கிய SHARE லாபம் தந்ததா?
News September 18, 2025
அனைத்து மதங்களையும் மதிக்கிறேன்: CJI கவாய்

மகாராஷ்டிராவில் ஜவாரி கோயிலில் உள்ள விஷ்ணு சிலையை சீரமைக்க கோரி SC-ல் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதை விசாரித்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் <<17747911>>தெரிவித்த கருத்து<<>> சர்ச்சையான நிலையில், அதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளார். தன்னுடைய கருத்துகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கலாம் என கூறிய அவர், தான் அனைத்து மதங்களையும் மதிப்பதாகவும் விளக்கமளித்துள்ளார்.
News September 18, 2025
திமுக, மநீம கூட்டணி புனிதமானது: கமல்ஹாசன்

திமுகவுடன், மக்கள் நீதி மய்யம் அங்கம் வகிப்பது வெறும் கூட்டணி மட்டுமல்ல, அதையும் தாண்டி புனிதமானது என கமல்ஹாசன் கூறியுள்ளார். கூட்டணிக்கு பிறகு மக்கள் நீதி மய்யம் திமுகவில் கரைந்துவிட்டதாக எதிர்கட்சிகள் சாடி வருகின்றன. இந்நிலையில், மநீம தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், ஆசியாவிலேயே முதல் மய்யவாத கட்சி மக்கள் நீதி மய்யம் என பதிலடி கொடுத்துள்ளார். உங்கள் கருத்தை கமெண்ட் பண்ணுங்க.