News August 8, 2024

கரூர் மாவட்டத்தில் மழை பெய்யக்கூடும்!

image

கரூர் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே இம்மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News October 31, 2025

கரூர்: இன்றே கடைசி நாள்!

image

கரூர் மக்களே, தமிழ்நாடு மின் விநியோகக் கழகத்தில் நிறுவன செயலாளர் (ACS/FCS) மற்றும் இடைநிலை நிறுவன செயலாளர் ஆகிய பதவிகள் நிரப்படவுள்ளது. மாத சம்பளமாக ரூ.25,000 முதல் ரூ.1,00,000 வரை வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<> இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க நாளை (31.10.2025) கடைசி நாள் ஆகும். இந்த தகவலை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News October 31, 2025

கரூர்: குடும்ப தகராறால் விபரீத முடிவு

image

கரூர் மாவட்டம் K. பரமத்தி அருகே, குவாரியில் மெக்கானிக்காக பணியாற்றும் மணிகண்டன் என்பவர், நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்கி செலவு செய்துள்ளார். இந்த விஷயம் அறிந்து மனைவி திட்டியதால் மனமுடைந்த அவர், நேற்று வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

News October 31, 2025

கிருஷ்ணராயபுரம் அருகே பாசன வாய்க்காலில் சடலம்!

image

கிருஷ்ணராயபுரம் அடுத்த மேட்டு மகாதானபுரம் பாசன வாய்க்காலில் கூலித்தொழிலாளர் பெரியசாமி (69) உடல் 5 நாட்கள் கழித்து மீட்கப்பட்டது. அவர் கடந்த 26-ம் தேதி வேலைக்கு சென்று வீடு திரும்பவில்லை. லாலாபேட்டை போலீசார் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து தேடினர். நேற்று மாலை பாசன வாய்க்காலில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

error: Content is protected !!