News August 8, 2024

புலிப்பாக்கத்தில் ஆட்சியர் நேரில் ஆய்வு

image

செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள கொளவாய் ரூ.60 கோடி மதிப்பீட்டில் ஏரிகளை ஆழப்படுத்தி, கரைகள் பலப்படுத்தி, நடைபாதைகள் அமைக்கப்பட உள்ள பணியினை மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதில், செங்கல்பட்டு சார் ஆட்சியர் நாராயண சர்மா, நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News August 7, 2025

சென்னைக்கு சிறப்பு சேர்க்கும் செங்கல்பட்டு

image

கார் உற்பத்தி அதிகம் என்பதாலே ஆசியாவின் டெட்ராய்டு என்ற பெயர் சென்னைக்கு உண்டு. சென்னையின் இந்த பெருமைக்கு செங்கல்பட்டும் காரணம் . ஆட்டோ மொபைல் துறையில் சென்னையின் புறநகர் பகுதியான செங்கல்பட்டு முக்கிய பங்கு வகிக்கிறது. மறைமலை நகரில் Ford Motors, Hyundai, Rane போன்ற முன்னனி கார் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. *சென்னைக்கே பெருமை சேர்க்கும் நம்ம மாவட்ட பெருமையை ஷேர் பண்ணுங்க*

News August 7, 2025

தமிழ்ச்செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

தமிழ் வளர்ச்சி துறை மூலம் தமிழ் செம்மல் விருது வழங்கப்படுகிறது. விருது பெறுபவர்களுக்கு ரூ.25 ஆயிரம் பரிசுத்தொகை, தகுதியுரையும் வழங்கப்படுகிறது. செங்கை மாவட்டத்தில் 2025ம் ஆண்டிற்கான விருதுக்கு தமிழ் ஆர்வலர்கள் விண்ணப்பம் அளிக்க www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து உரிய விவரங்களுடன் காஞ்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 7, 2025

செங்கல்பட்டு மக்களே சான்றிதழ் தொலைந்துவிட்டதா?

image

செங்கல்பட்டு மக்களே, வருவாய்துறையின் கீழ் பெறப்படும் சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்துவிட்டால் தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டாம். நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் செல்போனில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். <>இந்த லிங்கில்<<>> சென்று உங்கள் சான்றிதழ் எண்ணை பதிவிட்டு உடனே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதை ஷேர் செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க. <<17329698>>தொடர்ச்சி<<>>

error: Content is protected !!