News August 8, 2024
வாணியம்பாடி அருகே பஸ்ஸில் கள்ளச்சாராயம் சோதனை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆந்திரா எல்லை வொளித் மணி பாண்டா பகுதியில் திருப்பத்தூர் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் பஸ்ஸில் கள்ளச்சாராயம் வருகிறதா என சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் கடத்தி வந்த ஒரு தனியார் பஸ் பறிமுதல் செய்து டிரைவர், கண்டக்டர் கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக இச்சோதனை நடைபெற்று வருகிறது.
Similar News
News December 24, 2025
திருப்பத்தூர்: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, 9445398810, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, 9445398802, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601, 9445398695, தொழிலாளர் துறை உதவி ஆணையர் (பெண்கள் நலம்) – 9445398775, தொழிலாளர் உதவி ஆணையர் – 04425342002 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும். ஷேர் செய்யுங்க
News December 24, 2025
திருப்பத்தூர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News December 24, 2025
திருப்பத்தூர்: 50 பக்தர்களுடன் சென்ற பஸ் விபத்து!

திருப்பத்தூரில் இருந்து 50 பக்தர்களுடன் கூடிய தனியார் பஸ் மேல்மருவத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை (டிச.24) வேலூர் அடுத்த அரப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த பஸ் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த 10-க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.


