News August 8, 2024

5,000 விதைப்பந்துகளை வழங்கிய பள்ளி மாணவர்கள்

image

வேலூர் மாவட்டம் முழுவதும் உள்ள மலைகளில் 5 லட்சம் விதைப்பந்துகள் தூவ தயார் செய்யும் பணியில் சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் வேலூர் எழில் நகர் வேலம்மாள் CBSE பள்ளி மாணவர்கள் விதைகளை சேகரித்து பள்ளியின் முதல்வர் தலைமையில் 5,000 விதைகளை சமூக ஆர்வலர் தினேஷ் சரவணனிடம் வழங்கினர்.

Similar News

News October 21, 2025

வேலூர் மாவட்ட காவல்துறை இரவு வந்து பணி விவரம்

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

News October 20, 2025

வேலூர் அரசு பஸ் மோதி அடையாளம் தெரியாத நபர் பலி

image

வேலூர் வள்ளலார் பஸ் நிறுத்தம் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை நேற்றிரவு அக்.19 கடக்க முயன்ற 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மீது அவ்வழியாக வந்த அரசு பஸ் மோதியது. இந்த விபத்தில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த சத்துவாச்சாரி போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த நபர் யார்? என விசாரித்து வருகின்றனர்.

News October 20, 2025

வேலூர்: 10th பாஸ் போதும் கைநிறைய சம்பளம்

image

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் விளையாட்டு வீரர்களுக்கான கோட்டாவில் பணி வாய்ப்பு வழங்கப்படுகிறது. 391 ஜென்ரல் டியூட்டி கான்ஸ்டபிள் பதவி காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாதம் ரூ.21,700 முதல் ரூ.69,100 சம்பளமாக வழங்கப்படும். இதற்கு 18 – 23 வயது வரை இருக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கு <>இந்த இணையதளத்தில்<<>> விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!