News August 8, 2024
ஈரோடு மாநில அளவில் 2வது இடம்

மாநில அளவிலான எறிபந்து போட்டி ஈரோட்டில் 2 நாட்கள் நடந்தது. இதில் ஈரோடு, திருப்பூர், கோவை, சென்னை, கரூர், நாமக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. ஆண்கள் பிரிவில், 24 அணிகள், பெண்கள் பிரிவில், 23 அணிகள் கலந்து கொண்டன. ஆண்கள் பிரிவு இறுதி போட்டியில், கரூர் அணி தொடர்ந்து 5வது முறையாக வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இரண்டாம் இடத்தை ஈரோடு அணி பெற்றது.
Similar News
News November 4, 2025
ஈரோடு மாவட்ட இரவு காவலர் ரோந்து பணி விவரம்

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்தில் தங்கள் உட்கோட்ட அதிகாரிகளை கீழ்காணும் கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.
News November 4, 2025
அந்தியூர் அருகே சரக்கு வாகனம் நடுரோட்டில் கவிழ்ந்து விபத்து

ஈரோடு மாவட்டம் பவானியில் இருந்து அந்தியூர் நோக்கி சரக்கு வேன் வந்து கொண்டிருந்தது பருவாச்சி காந்திநகர் என்னும் இடத்தில் வரும் போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையின் நடுவே கவிழ்ந்தது இதில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் விபத்து குறித்து அந்தியூர் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்
News November 4, 2025
ஈரோடு: 12th PASS-ஆ? ரூ.71,900 சம்பளம்

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1,429 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12-ம் வகுப்பு முடித்து 18-வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <


