News August 8, 2024

ஈரோடு மாநில அளவில் 2வது இடம்

image

மாநில அளவிலான எறிபந்து போட்டி ஈரோட்டில் 2 நாட்கள் நடந்தது. இதில் ஈரோடு, திருப்பூர், கோவை, சென்னை, கரூர், நாமக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. ஆண்கள் பிரிவில், 24 அணிகள், பெண்கள் பிரிவில், 23 அணிகள் கலந்து கொண்டன. ஆண்கள் பிரிவு இறுதி போட்டியில், கரூர் அணி தொடர்ந்து 5வது முறையாக வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இரண்டாம் இடத்தை ஈரோடு அணி பெற்றது.

Similar News

News September 15, 2025

ஈரோடு: ரயில்வே துறையில் வேலை!

image

ஈரோடு மக்களே இந்திய ரயில்வேயில் பணிபுரிய ஆசைய ? தற்போது காலியாக உள்ள 368 ’Section Controller’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தா போதுமானது.மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும். இதில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க<> இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. நவ.14ஆம் தேதி கடைசி நாளகும்.அருமையான வேலை வாய்ப்பு இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 15, 2025

ஈரோடு: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி ஈஸி!

image

ஈரோடு மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 அழைக்கலாம். இதனை அனைவருக்கும் Share பண்ணுங்க!

News September 15, 2025

ஈரோடு அருகே சோகமான நிகழ்வு!

image

ஈரோடு: பெருந்துறை பெருமாம்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன் (40). வியாபாரி. இவர் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் வெளியில் சென்ற அவர், பெருந்துறை துடுப்பதி பாலக்கரை பகுதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு கீழ்பவானி வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக பெருந்துறை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!