News August 8, 2024

ஆன்லைன் ரம்மியால் நிறுவன ஊழியர் தற்கொலை

image

ஆன்லைன் ரம்மியால் தனியார் நிறுவன மேலாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருகம்பாக்கத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (51), சுமார் 3 ஆண்டுகளாக ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார். இதில், ரூ.15 லட்சம் வரை இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அவர், தனது பிள்ளைகளுக்கு ‘இதுதான் இறுதிநாள்’ என குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை ஒரு தீர்வாகாது

Similar News

News September 19, 2025

சென்னை: 12th போதும் ரூ.81,000 சம்பளம்

image

எல்லைப் பாதுகாப்புப் படையில் ரேடியோ ஆபரேட்டர் (RO) & ரேடியோ மெக்கானிக் (RM) பிரிவில் கான்ஸ்டபிள் பணிக்கு 1,121 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ITI, 12th படித்தவர்கள் படித்திருந்தால் போதும். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும். செப்.23 வரை இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்க்கை கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கவும். SHARE பண்ணுங்க

News September 19, 2025

சென்னையில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்

image

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இமெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலையடுத்து வெடிகுண்டு நிபுணர்களைக் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் சென்னை ராஜாஜி சாலையில் உள்ள சுங்க இலாகா அலுவலகத்திற்கும் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் வெடிகுண்டு நிபுணர்களைக் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News September 19, 2025

சென்னை: மழையை எதிர்கொள்ள தயார்- கே.என்.நேரு

image

மயிலாப்பூரில் அமைச்சர் கே.என் நேரு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சென்னையில் பல இடங்களில் திட்டமிட்டபடி மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் தண்ணீர் தேங்கும் இடங்களில் வேறொரு திட்டம் மூலம் மழை நீர் வடிக்கால்வாய் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் முடிவடையும் என கூறினார். மேலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!