News August 8, 2024

கடலில் வீசப்பட்ட ரூ.3 கோடி தங்கம் மீட்பு

image

இலங்கையிலிருந்து ராமேஷ்வரத்துக்கு ரூ.3 கோடி மதிப்பிலான தங்கத்தை மர்ம கும்பல் கடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கல்பிட்டி தீவு அருகே ரோந்து பணியிலிருந்த இலங்கை கடற்படையினர் சந்தேகத்துக்கிடமான படகை நிறுத்துமாறு கூறியுள்ளனர். படகிலிருந்தவர்கள் பார்சலை கடலில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். வீசப்பட்ட தங்கத்தை இலங்கை கடற்படையினர் நேற்று மீட்டனர். இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News August 16, 2025

ராமநாதபுரம்: நிவாரணம் பெரும் மீனவர்களின் பட்டியல் வெளியீடு

image

இராமநாதபுரம் மாவட்டம் (15.08.2025) பெரியபட்டினம் FRD-87 ஆண்கள் மீனவர் கூட்டுறவு சங்கம் அறிவிப்பு : மீனவ குறைவு கால நிவாரணம் பெறும் புதிய பயனாளிகளாக உள்ள மீனவர்கள் உறுப்பினர் எண் உள்ளவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் உள்ள ஆண்கள் மீனவ சொசைட்டி அலுவலகத்தில் அல்லது சங்கத் தலைவர் தொடர்பு
தொடர்பு எண்ணில் (99430 94334) அழைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 15, 2025

ராமநாதபுரம் மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

(15.08.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100ஐ டயல் செய்யலாம். திருவாடானை கீழக்கரை பரமக்குடி ராமநாதபுரம் ராமேஸ்வரம் முதுகுளத்தூர் கமுதி உள்ளிட்ட பகுதிகளில் அவசர தொடர்புக்கு மேற்கண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 15, 2025

ராம்நாடு: கால அவகாசம் நீட்டிப்பு

image

பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணாக்கர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என அனைத்து பிரிவினரின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைப் போட்டிக்கு முன்பதிவு செய்ய கால அவகாசம் ஆக. 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் <>cmtrophy.sdat.in<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். 9514000777 என்ற உதவி எண்ணெய் அழைக்கவும். 67 வகையான போட்டிகள் உள்ளன. மொத்த பரிசு – ரூ.37 கோடி. SHARE IT.

error: Content is protected !!