News August 8, 2024
சச்சினுக்கு பிறகு ரோஹித்

இலங்கைக்கு எதிரான தொடரை இழந்த மோசமான சாதனையை, 27 ஆண்டுகளுக்கு பிறகு ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி படைத்துள்ளது. இதற்குமுன், 1997ஆம் ஆண்டு, சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய அணி, இலங்கை அணியிடம் ஒருநாள் கிரிக்கெட் தொடரை இழந்தது. அதற்கு பிறகு இலங்கை மண்ணில் இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்ததில்லை என்ற நிலையில், இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளதாக ரசிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 6, 2025
மழை வெளுத்து வாங்கும்

கனமழையால் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், நெல்லை, வேலூர், விழுப்புரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. எனவே பள்ளி, கல்லூரி, ஆபீஸுக்கு செல்பவர்கள் குடைகள், ரெயின் கோட்டை எடுத்து செல்ல மறக்காதீங்க மக்களே!
News November 6, 2025
கனமழை: முதல் மாவட்டமாக விடுமுறை அறிவிப்பு

கனமழை எதிரொலியால் முதல் மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூரில் காலை 6 மணி முதல் மழை கொட்டித் தீர்க்கிறது. இதனால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட் விடுக்கப்பட்டதால், மற்ற மாவட்டங்களுக்கும் விடுமுறை அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.
News November 6, 2025
மீண்டும் பார்முக்கு திரும்புவாரா கில்?

இந்திய T20 அணியின் Vice Captain சுப்மன் கில், ஆஸி.,யில் தொடர்ந்து தடுமாறி வருகிறார். ODI தொடரில் வெறும் 43 ரன்களும், நடந்து முடிந்துள்ள 3 T20 போட்டிகளில் 57 ரன்களும் மட்டுமே எடுத்துள்ள, அவரின் தேர்வு குறித்து கடும் விமர்சனங்கள் எழத் தொடங்கிவிட்டன. அவருக்கு பதிலாக, ஓப்பனராக ஜெய்ஸ்வால் அல்லது சாம்சனை கொண்டுவரலாம் என்ற கருத்துக்களும் வலுத்துள்ளது. விமர்சனங்களுக்கு இன்று முற்றுப்புள்ளி வைப்பாரா?


