News August 7, 2024
முசிறி அருகே பாலப்பட்டியில் விவசாயி வெட்டிக்கொலை

திருச்சி மாவட்டம் முசிறி அருகே பாலப்பட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (55). இதே ஊரை சேர்ந்தவர் அழகேசன் (50) இருவரும் ஒரே கேணியில் தண்ணீர் எடுத்து விவசாயம் செய்து வந்தனர். இது சம்பந்தமாக இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது நிலையில் பழனிச்சாமியின் மரத்தை அழகேசன் வெட்டியதாகவும் அது குறித்து கேட்டதற்கு அழகேசன் மற்றும் அவரது தந்தை உத்தண்டன் இருவரும் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர்.
Similar News
News December 31, 2025
திருச்சி: ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம்

திருச்சியில் இருந்து புறப்படும் ரயில்களின் நேரம் நாளை (ஜன.1) முதல் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி – திருவனந்தபுரம் அதிவிரைவு ரயில் காலை 7:20 க்கு பதிலாக 7:15 க்கும், திருச்சி – திண்டுக்கல் டெமு ரயில் மாலை 6:10க்கு பதிலாக மாலை 6:05 க்கும், திருச்சி – திருவாரூர் பயணிகள் ரயில் இரவு 8:25 க்கு பதிலாக 8:20 க்கும் புறப்படும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News December 31, 2025
திருச்சி: தவறி விழுந்து பரிதாப பலி

செங்கம் பகுதியை சேர்ந்தவர் பழனி (53). இவர் திருச்சி தனரத்தினம் நகரில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக குடோனில் கடந்த ஒரு வாரமாக ஆஸ்பெட்டாஸ் ஷீட் அமைத்தல் மற்றும் வெல்டிங் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை பணியின் போது, கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த அவர், படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து காந்தி மார்கெட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 31, 2025
திருச்சி: +2 மாணவி நீரில் மூழ்கி பலி

முசிறி அடுத்த தண்டலைப்புத்தூரை சேர்ந்தவர் நெடுஞ்செழியன் மகள் தர்ஷினி (17). பிளஸ்-2 படித்து வரும் அவர், நேற்று முன்தினம் தனது உறவினர்களுடன் முக்கொம்பிற்கு சென்றுள்ளார். அப்போது ஆற்றில் இறங்கி குளித்த அவர், எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வாத்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


