News August 7, 2024

ஆலங்குடி ஸ்ரீநாடியம்மன் கோவில் மதுஎடுப்பு திருவிழா

image

ஆலங்குடி ஸ்ரீநாடியம்மன் கோவில் மதுஎடுப்பு திருவிழா இன்று நடைபெற்றது. ஆலங்குடியை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து பெண்கள் அலங்காிக்கப்பட்ட மதுகுடங்களை ஊா்வலமாக எடுத்துவந்தனா். கோவிலை அடைந்தபின் எடுத்துவந்த மதுகுடங்களை சுவாமிக்கு வைத்து வழிபட்டனா். சுவாமி நாடியம்மனுக்கு மஹா தீபாதரனை நடைபெற்றது. பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மதுஎடுப்பு திருவிழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

Similar News

News October 22, 2025

புதுகை: சாலை விபத்தில் காவலர் பலி

image

திருமயம் அருகே நமண சமுத்திரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் சதீஷ் (43) நேற்று (அக்.21) பணி முடிந்து திருகோகர்ணம் காவலர் குடியிருப்பில் உள்ள அவரது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, திருச்சி – காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் புறகரப்பண்ணை அருகே காவலர் சதீஷின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் மரத்தில் மோதியது. இதில், சதிஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

News October 22, 2025

புதுகை: இந்திய அஞ்சல் துறையியில் வேலை

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள 348 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.

1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. கடைசி தேதி : 29.10.2025
4. சம்பளம்: ரூ.30,000
5. வயது வரம்பு: 20 – 35 (SC/ST – 40, OBC – 38)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>{CLICK HERE}<<>>
இத்தகவை அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க…

News October 22, 2025

புதுக்கோட்டை மாநகரில் 70 டன் குப்பைகள் அகற்றம்

image

தீபாவளி பண்டிகையைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாநகரில் பட்டாசு உள்ளிட்ட குப்பைகள் 70 டன் வரை சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டன. மழை பெய்தும் 415 தூய்மைப் பணியாளர்கள் 42 வார்டுகளில் பணியில் ஈடுபட்டனர். சேகரிக்கப்பட்ட குப்பைகள் லாரிகளில் திருக்கட்டளை பகுதியில் உள்ள மாநகர குப்பைக் கிடங்கில் சேர்க்கப்பட்டன. இந்த பணியை மாநகராட்சி ஆணையர் நாராயணன் கண்காணித்தார்.

error: Content is protected !!