News August 7, 2024
உயிர் காக்கும் காவலர்களுக்கு பணி நியமன ஆணை

பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, புதுச்சேரி கடலோரப் பகுதிகளில், நீச்சல் மற்றும் மீட்புப்பணிகளில் பயிற்சி பெற்ற 39 உயிர் காக்கும் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி சட்டப்பேரவையில், முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் ரங்கசாமி இந்த 39 உயிர் காக்கும் காவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
Similar News
News October 17, 2025
புதுவை: ஒரு லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்

புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் காவல்துறையும், சுகாதாரத்துறையும் இணைந்து பள்ளி, கல்லூரிகள் அமைந்துள்ள பகுதியில் இருந்து 100 மீட்டா் சுற்றளவில் புகையிலை பொருள்கள் விற்பனை செய்த பல கடைகளில் நேற்று சோதனை செய்யப்பட்டன. அப்போது ரூ.1 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் கடைக்காரர்களுக்கு சில அறிவுரைகளையும் அவர்கள் வழங்கினர்.
News October 17, 2025
புதுவை: பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டல்

புதுச்சேரி பூமியான்பேட்டை, பாவாணர் நகர் அருகே அவ்வழியாக செல்லும் பொதுமக்களை வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி வருவதாக ரெட்டியார்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கத்தியுடன் பொதுமக்களை மிரட்டி கொண்டிருந்த பாவாணர் நகர், 4வது குறுக்கு தெருவைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை நேற்று கைது செய்தனர்.
News October 17, 2025
தீபாவளி பரிசு தொகுப்பு வழங்கிய முதல்வர்

புதுச்சேரி, திலாசுபேட்டை தொகுதியில் தீபாவளி பரிசு தொகுப்பாக ரூ.585 மதிப்புள்ள 2-கிலோ சர்க்கரை, 2-கிலோ சூரியகாந்தி எண்ணெய், 1-கிலோ கடலைப்பருப்பு, ரவை, மைதா அரைக்கிலோ என தீபாவளி தொகுப்பை பொதுமக்களுக்கு மாநில முதல்வர் ரங்கசாமி வழங்கி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் திருமுருகன், அரசு கொறடா ஆறுமுகம், சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ், அரசு செயலர் முத்தம்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.