News August 7, 2024
ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் பலி

நேபாளம் அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் தீயில் கருகி பலியாகினர். காத்மாண்டு அருகே சென்றுகொண்டிருந்த சிறிய ரக ஹெலிகாப்டர் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், நுவாகாட் என்ற பகுதியில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இந்த கோர சம்பவத்தில் விமானி உள்பட அதில் பயணம் செய்த 5 பேர் பலியாகியுள்ளனர். சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News October 29, 2025
பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS

2025 – 26ம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் +1 மாணவர்களுக்கான இலவச சைக்கிள் வழங்கும் பணிகளை அரசு தொடங்கியுள்ளது. சைக்கிளுக்கான கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மாணவிகளுக்கு தலா ₹4,250 மதிப்பிலும், மாணவர்களுக்கு தலா ₹4,375 மதிப்பிலும் சைக்கிள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 3 ஆண்டுகள் உத்தரவாத அட்டை வழங்குவதை பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
News October 29, 2025
மாரி செல்வராஜுக்கு ’இயக்குநர் திலகம்’ பட்டம்

’பைசன்’ படத்தை பார்த்த வைகோ இயக்குநர் மாரி செல்வராஜுக்கு ’இயக்குநர் திலகம்’ என பட்டம் வழங்கியிருக்கிறார். அவருடைய 2 பக்க பாராட்டு மடலை மாரியிடம் கொடுத்த துரை வைகோ, ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து, பல கொடுமைகளை அனுபவித்து அர்ஜுனா விருது வரை சென்றவரின் சாதனையை இயக்குநர் சிறப்பாக எடுத்துள்ளதாக கூறினார். மேலும், சமூகத்தை நல்வழிப்படுத்தும் இதுபோன்ற படைப்புகள் நிறைய வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.
News October 29, 2025
Ex-Agniveers-க்கு புதிய அப்டேட்!

4 ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் பணிபுரிபவர்களே Agniveers. 4 ஆண்டுகள் முடிந்த பின், 25% பேர் மட்டுமே நிரந்தர பணிக்கு தேர்வு செய்யப்படுவர். மற்றவர்கள் விடுவிக்கப்படுவர். இந்த Ex-Agniveers-க்கு, தனியார் செக்யூரிட்டி ஏஜென்சிகள் அல்லது பாதுகாப்பு பயிற்சி நிறுவனங்களில், வேலை கிடைப்பதை மாநில, யூனியன் பிரதேச அரசுகள் உறுதிசெய்ய வேண்டுமென உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.


