News August 7, 2024

குடிநீராக்கும் திட்டத்தை ஆய்வு செய்த அமைச்சர் நேரு

image

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள பேரூரில், கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (ஆகஸ்ட் 7) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த சுத்திகரிப்பு திறன் கொண்ட நிலையம், 400 மில்லியன் லிட்டர் குடிநீர் சென்னைக்கு அனுப்பி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News December 8, 2025

FLASH: செங்கல்பட்டு- இருவருக்கு அரிவாள் வெட்டு!

image

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் சானிடோரியம் பகுதியில் நேற்று செய்யூரை சேர்ந்த தினேஷ், செம்பியத்தை சேர்ந்த அப்துல் ரஹிம் ஆகியோர் டாஸ்மாக் அருகே நின்றுகொண்டிருந்தனர். அப்போது பெண்களுடன் வந்த கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுங்களால் இருவரையும் தாக்கியுள்ளனர்.மேலும் முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக நடத்தப்பட்ட தாக்குதலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

News December 8, 2025

செங்கல்பட்டு: ரயிலில் பொருட்களை தொலைத்து விட்டீர்களா…?

image

ரயிலில் பயணம் செய்யும் போது உங்கள் போன் அல்லது முக்கிய பொருட்கள் தொலைத்து விட்டீர்களா? கவலை வேண்டாம் இந்திய ரயில்வே 24×7 செயல்படும் ரயில் மடாட் (Rail Madad) சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. பயணிகள் <>Rail Madad<<>> மொபைல் செயலியில் PNR-யை உள்ளிட்டு, காணாமல் போன பொருட்களின் விவரங்களை பதிவு செய்யலாம். ஆப் பயன்படுத்த விரும்பாத பயணிகள் railmadad.indianrailways.gov.in இணையதளத்திலும் புகார் அளிக்கலாம். SHARE

News December 8, 2025

செங்கல்பட்டு: ஃபோனுக்கு WIFI இலவசம்!

image

செங்கல்பட்டு மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். இந்த <>லிங்க் <<>>மூலம் விண்ணப்பித்தால் உங்கள் வீடுகளுக்கே வந்து அமைத்து தருவார்கள். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!