News August 7, 2024

வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் கவனத்திற்கு…

image

வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு சிபிஐ தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில், சிபிஐ சின்னத்தையும், அதிகாரிகள் பெயர்களையும் பயன்படுத்தி மர்ம நபர்கள் போலி ஆவணம் தயாரித்து சம்மன் அனுப்புவதாகவும், வாட்ஸ்அப் அழைப்பு மேற்கொண்டு மிரட்டி பணம் பறிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆதலால் போலி நபர்களிடம் ஏமாறாமல் இருக்க மக்கள் விழிப்புடன் இருக்கும்படி சிபிஐ அறிவுறுத்தியுள்ளது. PLS SHARE IT

Similar News

News March 22, 2026

நாமக்கல்லில் மார்ச் 25-ல் கோலாகலமாக தொடங்குகிறது!

image

நாமக்கல் நாமகிரி தாயார் உடனுறை நரசிம்ம பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி மாத தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற மார்ச் 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நரசிம்ம சுவாமி கோவில் வளாகத்திலுள்ள கொடிமரத்தில் நடைபெறும் இந்த நிகழ்வை தொடர்ந்து, முக்கிய விழாவான தேரோட்டம் மற்றும் பல்வேறு ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

News March 22, 2026

வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க கால அவகாசம்

image

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் வரும் 26-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ECI தெரிவித்துள்ளது. இந்த <>இணையதளத்தை<<>> பார்வையிட்டு, வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சரிபார்த்துக்கொள்ள முடியும். பெயர் இல்லையென்றால் விரைந்து விண்ணப்பிக்கவும். படிவம் 6ஐ பயன்படுத்தி, சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரின் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். உதவிக்கு ECINet செயலியை பயன்படுத்தலாம்.

News March 22, 2026

கிரிப்டோ கரன்சி முதலீடு.. ₹30 கோடி மோசடி

image

சென்னையில் கிரிப்டோ முதலீடு என்ற பெயரில் ₹30 கோடி மோசடி நடைபெற்றுள்ளது. TFT Blockchain என்ற நிறுவனம் கிரிப்டோவில் முதலீடு செய்தால் மாதந்தோறும் 20% வரை நிலையான வருமானம் தருவதாக ஆசை வார்த்தை கூறி நூற்றுக்கணக்கானவர்களை ஏமாற்றியது. இதுகுறித்த புகாரின்பேரில் விசாரணை நடந்து வருகிறது. ஆருத்ரா கோல்டு, நியோ மேக்ஸ் போன்ற பெரிய நிதி நிறுவன மோசடிகளை தொடர்ந்து, இந்த கிரிப்டோ மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

error: Content is protected !!