News August 7, 2024
வயநாட்டிற்கு ₹2 கோடி நிதி அளித்த பிரபாஸ்

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில், கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு நடிகர் பிரபாஸ் ₹2 கோடி நிதி வழங்கியுள்ளார். முன்னதாக தென்னிந்திய நடிகர், நடிகைகள் பலரும் நிதியுதவி அளித்திருந்தனர். அங்கு கடந்த 30ஆம் தேதி நேரிட்ட நிலச்சரிவில் சிக்கி 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 9ஆவது நாளாக மீட்புப்பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
Similar News
News September 18, 2025
₹100 கோடி வசூலித்த ‘மதராஸி’

சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படம் உலகளவில் ₹100 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. செப்.5-ம் தேதி வெளியான ‘மதராஸி’ முதல் 2 நாளில் ₹50 கோடி வசூலித்த நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்றதால் வசூலில் சறுக்கியதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’, ‘டான்’, ‘அமரன்’ வரிசையில் மதராஸியும் ₹100 கோடி வசூலில் இணைந்துள்ளது. நீங்க படம் பார்த்தாச்சா?
News September 18, 2025
பண மழை கொட்டப் போகும் 3 ராசிகள்

வரும் 21-ம் தேதி, உத்தரட்டாதி நட்சத்திரத்தில் சூரிய கிரகணம் நிகழவுள்ளது. இதனால் அதிக நன்மைகள் பெறும் ராசியினர்: *ரிஷபம்: தன்னம்பிக்கை அதிகரிக்கும், முடிக்கப்படாத பணிகள் நிறைவடையும், வணிகத்தில் லாபம் பெருகும் *சிம்மம்: தொட்டதெல்லாம் வெற்றியாகும், தங்கம், வெள்ளியில் முதலீடு செய்யலாம், வருமானம் பெருகும் *துலாம்: தொடர்ந்து வந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும், நிலம் வாங்க வாய்ப்பு, நேரம் சாதகமாகும்.
News September 18, 2025
SCIENCE: காக்கைகள் உங்களை கொத்துவது ஏன் தெரியுமா?

காக்கைகள், தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய நபரை, சில ஆண்டுகள் கூட ஞாபகம் வைத்து பழிவாங்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. காக்கையின் மூளையில் உள்ள அமிக்தாலா எனும் பகுதிதான், மனிதர்களின் முகங்களை நினைவு வைத்துக்கொள்ள உதவுகிறதாம். எனவே, காக்கையை அச்சுறுத்தும் வகையில் நீங்கள் ஏதாவது செய்திருந்தால் தான், அது உங்கள் தாக்குமாம். காக்கையிடம் குட்டு வாங்கிய அனுபவம் இருக்கா?