News August 7, 2024
பெரம்பலூரில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்

பெரம்பலூரிலிருந்து அரணாரை வழியாக புதுநடுவலூர் வரை செல்லும் சிற்றுந்து இன்று காலை பெரம்பலூர் பழைய பேருந்துநிலையம் வந்தடைந்தது. இதில் பள்ளி மாணவர்கள் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பிட்ட நேரத்திற்கு சரியான முறையில் அரசு பேருந்து இயக்கப்படாததே இதற்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
Similar News
News December 26, 2025
பெரம்பலூர் மாவட்டம்- ஓர் பார்வை

சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் பெரம்பலூர் மாவட்டத்தின் முக்கிய தரவுகள் குறித்து அறிந்து கொள்வோம்.
▶️ மொத்த மக்கள் தொகை – 5.65 லட்சம்
▶️ ஆண்கள் – 2.82லட்சம்
▶️ பெண்கள்- 2.83 லட்சம்
▶️ படிப்பறிவு – 83.39%
▶️ மொத்த பரப்பளவு – 1,756 சதுர கி.மீ. SHARE NOW!
News December 26, 2025
பெரம்பலூர்: தீப்பிடித்து எரிந்த புளியமரம்

பெரம்பலூர் மாவட்டம், இரூரில் இருந்து கூத்தனூர் செல்லும் சாலையின் ஓரத்திலிருந்த புளியமரம் ஒன்று நேற்று முன்தினம் இரவு திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதனை கண்ட அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதுகுறித்து பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து மரத்தில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.
News December 26, 2025
பெரம்பலூருக்கு கிடைத்த புதிய சிறப்பு

“தமிழ்நாடு மாதிரி பள்ளிகளைப் போல, பெரம்பலூா் மாவட்டத்தில் வட்டார அளவில் அரசு மேல்நிலைப் பள்ளிகள் வெற்றிப் பள்ளிகளாக தோ்ந்தெடுக்கப்பட்டு, அவற்றை மையப் பள்ளியாகக் கொண்டு சுற்று வட்டாரங்களில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் +2 பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சனிக்கிழமை தோறும் ஜேஇஇ, நீட், சியூஇடி தொடா்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.” என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தகவல் அளித்துள்ளார்.


