News August 7, 2024

BREAKING: நீலகிரியில் யானை மரணம்!

image

நீலகிரி மாவட்டம், ஸ்ரீ மதுரை ஊராட்சிக்குட்பட்ட வடவயல் பகுதியில் விவசாயம் நடத்தி வரும் பாலகிருஷ்ணன் என்பவரின் பட்டா நிலத்தில் காட்டு யானை ஒன்று சேற்றில் சிக்கி மரணம் அடைந்துள்ளது. தகவல் அறிந்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் விரைந்து வந்த வனத்துறையினர் யானை மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News August 5, 2025

நீலகிரி: புதிய வீடு கட்டுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் வணிக மற்றும் குடியிருப்பு கட்டடங்களுக்கு கட்டட அனுமதி பெற விரும்பும் பொதுமக்கள், <>www.onlineppath.gov.in<<>> என்ற இணையதளத்தில் உள்ள Single Window Portal வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளார். மேலும், கட்டுமானத் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் தகவல்களுக்கு 94427 72701 என்ற உதவி எண்களில் தொடர்புகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 5, 2025

நீலகிரி: அவசர தொடர்புக்கு எண்கள் அறிவிப்பு

image

நீலகிரி மாவட்டத்திற்கு அதீத கனமழை எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. தற்போது அவசர உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, உதகை கோட்டத்திற்கு 0423-2445577, குன்னூர் கோட்டத்திற்கு 0423-2206002, கூடலூர் 04262-261296, உதகை வட்டத்திற்கு 0423-2442433, குன்னூர் வட்டத்திற்கு 0423- 2206102, கோத்தகிரி 04266-271718, குந்தா 0423- 2508123, கூடலூர் 04262-261252, பந்தலூர் 04262- 220734.

News August 5, 2025

நீலகிரி: மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்!

image

நீலகிரி ஆட்சியர் வெளியிட்டுள்ள தகவலில், பேரிடர் காலங்களில் மக்களை காக்க நீலகிரி மாவட்டத்தில் உள்ள 400 தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. என்எஸ்எஸ் மூலமாக 100 என்சிசி மூலமாக 200, நேரு யுவகேந்திரா மூலமாக 100 தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதற்கு 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். 3 வார பயிற்சி காலத்தில் உணவு, தங்குமிடம், சான்றிதழ் மீட்பு கருவிகள் வழங்கபடும்.

error: Content is protected !!