News August 6, 2024
1,869 கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி விதிமுறைகளை மீறி உரிய வரைபட அனுமதி இல்லாமல் 2 அடுக்கு 3 அடுக்குகளாக கட்டப்பட்டுள்ள 1,869 கட்டிடங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மதுரை மாநகராட்சி ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு இன்று (ஆக.06) உத்தரவிட்டுள்ளது. விதிமீறி கட்டப்பட்ட கட்டட உரிமையாளர்கள் வரைபட அனுமதியை மாநகராட்சி வசம் ஒப்படைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Similar News
News July 6, 2025
அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் விசாரணை – எஸ்.பி உத்தரவு

அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் மற்றும் யுவராஜ் ஆகியோர் வழக்கு ஒன்றுக்காக அலங்காநல்லூர் காவல்நிலையம் வந்தபோது, காவலர்களால் தாக்குதல் நடத்தியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் மாவட்ட காவல்துறை எஸ்.பி உத்தரவின் பேரில் சமயநல்லூர் டி.எஸ்.பி விசாரணை மேற்கொள்வார் என பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
News July 6, 2025
மமக மாநாடு – போக்குவரத்து மாற்றம்

பாண்டி கோவிலில் நடைபெறும் மனிதநேய மக்கள் கட்சி மாநாட்டிற்காக மதுரை காவல்துறை போக்குவரத்து ஏற்பாடுகளை அறிவித்துள்ளது. ராமநாதபுரம் சாலை, கோரிப்பாளையம், தத்தனேரி, காளவாசல் உள்ளிட்ட பகுதிகளில் மாற்றுப்பாதைகள் அமைக்கப்பட்டு, சர்வேயர் காலனி, பொன்னகரம், எஸ்.எஸ். காலனி வழியாக வாகனங்கள் திருப்பிவிடப்படும். இது பொதுமக்களுக்கு தொந்தரவில்லாத பயணத்தை உறுதி செய்யும். இன்று மதுரை காவல்துறை தெரிவித்துள்ளது.
News July 6, 2025
மதுரையில் இ- ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

மதுரை மக்களே தமிழக இணையம் சார்ந்த தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு<