News August 6, 2024

மீனவர் ராமச்சந்திரன் குடும்பத்திற்கு ₹10 லட்சம்

image

கடலில் மூழ்கி மாயமான ராமேஸ்வரம் மீனவர் ராமச்சந்திரன் குடும்பத்திற்கு ₹10 லட்சம் வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கடந்த 1ஆம் தேதி நெடுந்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் படகு மீது, இலங்கை கடற்படை படகு மோதியது. இதில், மலைச்சாமி என்பவர் பலியான நிலையில், ராமச்சந்திரன் மாயமானார். கடந்த 5 நாள்களாக இந்திய கடலோர காவல்படையினர் தேடி வரும் நிலையில், அவர் இன்னும் கிடைக்கவில்லை.

Similar News

News October 15, 2025

சிறுவர், இளைஞர்களுக்கு இன்ஸ்டாவின் புது ரூல்ஸ்!

image

இளம் தலைமுறையினரின் பாதுகாப்பிற்காக இன்ஸ்டா முக்கிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. தியேட்டரில் வயது வரம்பு சான்றிதழ் வழங்குவது போல, இனி இன்ஸ்டாவிலும் PG-13 வழிகாட்டுதலின் கீழ்தான் வீடியோக்களை பார்க்க முடியும். இது நம்மூரின் ‘A’ சர்ட்டிபிகேட்டுக்கு சமமானது. 18 வயதுக்குட்பட்டவர்கள் தானாகவே இந்த PG-13 சேர்க்கப்படுவார்கள். அவர்களுக்கு ஆபாசம், போதைப்பொருள், வன்முறை போன்ற வீடியோஸ் காட்டப்படாது.

News October 15, 2025

கரூர் நெரிசல் திட்டமிடப்பட்டதா என சந்தேகம்: EPS

image

விஜய் பேச ஆரம்பித்த 10 நிமிடத்தில் செருப்பு வீசப்பட்டதாகவும், அதுவே கரூர் நெரிசலுக்கு காரணம் என்றும் EPS விமர்சித்துள்ளார். 25 மருத்துவர்கள் வந்தாலும், உடற்கூராய்வு செய்ய கரூர் மருத்துவமனையில் மேசை எங்கே உள்ளது என்று கேள்வி எழுப்பிய EPS, ஒரு நபர் ஆணையம் உண்மையை மறைக்கும் முயற்சி என்று விமர்சித்தார். கரூர் நெரிசல் திட்டமிடப்பட்ட செயல் என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

News October 15, 2025

எதிர்க்கட்சிக்கு பேச வாய்ப்பளிக்கவில்லை: இபிஎஸ்

image

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிக்கு பேச சபாநாயகர் வாய்ப்பளிக்கவில்லை என்று EPS விமர்சித்துள்ளார். சட்டப்பேரவையில் இருந்து முழக்கமிட்டபடியே அதிமுக MLA-க்கள் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய EPS, பேரவை உள்ளே பேச முடியாததை செய்தியாளர்களிடம் பேசுவதாக குறிப்பிட்டார். பாதுகாப்பு குறைபாடே நெரிசலுக்கு முக்கிய காரணம் என்று EPS குற்றம்சாட்டினார்.

error: Content is protected !!