News August 6, 2024
சேலம், விருதுநகரில் நாளை உள்ளூர் விடுமுறை

சேலத்தில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயிலில், ஆடி மாதம் நடைபெறும் திருவிழா மிகவும் பிரபலம். இதையொட்டி சேலம் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய ஆக.31 வேலைநாள். இதேபோல, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம் நாளை நடைபெறுவதால், விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய ஆக.17 வேலைநாள்.
Similar News
News December 25, 2025
ஆபிரகாம் லிங்கன் பொன்மொழிகள்

*நான் மெதுவாக நடப்பவன், ஆனால் ஒருபோதும் பின்னோக்கி நடப்பதில்லை.
*உங்களுடைய எதிரிகளை தன்னுடைய எதிரிகளாக நினைப்பவனே உங்கள் நண்பன்.
*வெற்றிகரமான பொய்யராக வருமளவுக்கு எந்த மனிதனுக்கும் போதுமான நினைவாற்றல் கிடையாது.
*எதிர்காலம் பற்றிய ஒரு சிறந்த விஷயம் என்னவென்றால், அது ஒரு நாள் வந்தே தீரும் என்பதே.
News December 25, 2025
தமிழக மக்களை இப்படி சொன்னார்கள்: DMK MP

தமிழக மக்கள் டிவி சீரியல் பார்த்துக்கிட்டு ஊர் நியாயம் பேசிட்டு இருக்காங்க, அவங்களுக்கு எதுக்கு பணம் கொடுக்கணும்னு பார்லிமெண்ட்ல பாஜககாரங்க பேசுனாங்க என்று சத்தியம் செய்து கூறியுள்ளார், தருமபுரி DMK MP மணி. 100 நாள் வேலை திட்ட மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் MP பேசியது தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், திமுகவினர் பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
News December 25, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கொடுங்கோன்மை ▶குறள் எண்: 560 ▶குறள்: ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின். ▶பொருள்: ஆட்சியாளர் நீதி தவறினால் நாட்டில் பருவகாலமும் தவறி மழையும் பெய்யாது போகும்.


