News August 6, 2024

திருப்பத்தூரில் 21 குண்டுகள் முழங்க மரியாதை

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் துறையின் சார்பில் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் நக்சலைட் தாக்குதலில் உயிரிழந்த காவல்துறையினருக்கு 44-வது வீரவணக்க நாள் (06.08.2024) கடைபிடிக்கப்பட்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நாள் இன்று நடைபெற்றது. இதில் காவல்துறை சார்பில் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Similar News

News September 19, 2025

திருப்பத்தூர்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News September 19, 2025

திருப்பத்தூர் மாவட்டம் காவல்துறை அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று (19-09-25) மாவட்ட மக்களுக்கு செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி மழை காலங்களில் மக்கள் தாழ்வான பகுதிகள் மற்றும் தண்ணீர் தேங்கி உள்ள பகுதிகளில் வாகனங்களை இயக்க வேண்டாம் என்றும், ஆறு குளம் போன்ற நீர் நிலை பகுதிகளுக்கு குழந்தைகளை தனியா குளிக்க செல்ல அனுமதிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தி அவசர தேவைக்கு காவல் துறையின் உதவி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

News September 19, 2025

திருப்பத்தூர்: மழைக்காலத்தில் இது இருந்தால் போதும்!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் தினமும் கனமழை பெய்து வருகிறது. மரம் முறிந்து விழுவது, மின்கம்பங்கள் சாய்வது போன்ற இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் சேதங்கள் தொடர்பாக, மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் நீங்கள் புகார் செய்யலாம். அவசர கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 என்ற எண்ணிலோ (அ) 04179 – 222111 என்ற எண்ணிலோ பொதுமக்கள் தகவல்கள் தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!