News August 6, 2024

ஈரோடு கலெக்டர் அறிவிப்பு

image

ஈரோடு மாவட்டத்தில், ஊரக பகுதி பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் 2016-17 முதல் 2021-22 வரை ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகள் மற்றும் ஆவணங்களை சமூக தணிக்கை மேற்கொண்டு சமூக தணிக்கை வரும் 9ஆம் தேதி நிறைவு பெறுகிறது. அன்றைய தினம் 13 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை நடைபெற உள்ளது. அதற்கான இடம், நேரம் தொடர்புடைய கிராம ஊராட்சி மூலம் அறிவிக்கப்படும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Similar News

News December 24, 2025

கோபி: செங்கோட்டையனை எதிரித்து மனு

image

கோபி சட்டமன்ற தொகுதியில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக சார்பில் செங்கோட்டையன் போட்டியிடுவார் என்ற சூழலில் சமீபத்தில் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த அவரின் அண்ணன் மகன் கே.கே. செல்வன் அதிமுக சார்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். தற்போது மேலும் கோபியில் போட்டியிட மாநில ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் வி.கே. சி.சிவகுமார் விருப்ப மனுவை வழங்கியுள்ளார்.

News December 24, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவிப்பு….

image

பாதசாரிகள் சாலையைக் கடக்கும்போது, பாதுகாப்பிற்காக வரிக்குதிரைக் கோடுகளை (Zebra Crossing) கண்டிப்பாகப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் அவை பாதசாரிகளுக்கான பாதுகாப்பான இடத்தைக் குறிக்கின்றன, வரிக்கோடுகளைப் பயன்படுத்தும்போது, சாலையைக் கடப்பதற்கு முன் இருபுறமும் பார்த்து, வாகனங்கள் முழுமையாக நின்ற பின்னரே கடக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

News December 24, 2025

ஈரோடு: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!