News August 6, 2024
செந்தில் பாலாஜி ஜாமின் மனு ஒத்திவைப்பு

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மேல்முறையீட்டு வழக்கை, ஆகஸ்ட் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம். போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிந்தது. இந்த வழக்கில், கடந்த ஆண்டு அவர் கைதான நிலையில், ED காவலிலிருந்து ஜாமின் வழங்குமாறு செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
Similar News
News March 11, 2026
மது விற்கப்படவில்லை திணிக்கப்படுகிறது- அன்புமணி குற்றச்சாட்டு

திருச்சி பொதுக்கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், “இந்தியாவிலேயே அதிக கொலைகள் நிகழ்ந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. மது விற்கப்படவில்லை திணிக்கப்படுகிறது. மத்தியிலும் நம்ம ஆட்சி, தமிழகத்திலும் நம்ம ஆட்சி. மண், மலையைத் தொடர்ந்து கிட்னியையும் கொள்ளை அடித்துள்ளனர். எனவே இந்த ஆட்சியை அகற்ற எங்கள் கூட்டணிக்கு வாய்ப்பு தாருங்கள்” எனக் கூறியுள்ளார்.
News March 11, 2026
சிலிண்டர் சிக்கல்.. அரசு ஹாஸ்பிடல்களில் புதிய ஏற்பாடு

நாடு முழுக்க சிலிண்டர் தட்டுப்பாடு நிலவும் நிலையில் அரசு ஹாஸ்பிடல்களுக்கு முக்கிய ஆலோசனைகளை மருத்துவக் கல்வி இயக்குநரகம் வழங்கியுள்ளது. நோயாளிகளுக்கு உணவு வழங்குவது பாதிக்கப்படாமல் இருக்க குறைவான எரிபொருள் தேவைப்படும் உணவுகளை தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவல், ரொட்டி, ஓட்ஸ் போன்ற உணவுகள் நோயாளிகளின் ஃபுட் மெனுவில் அதிகம் இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
News March 11, 2026
BREAKING: கேஸ் சிலிண்டர்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், கேஸ் விநியோகத்தை சீர்படுத்துவது குறித்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர் சக்கரபாணி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, கேஸ் சிலிண்டர் விநியோகம், பெட்ரோல் இருப்பு குறித்து குழு அமைக்கப்பட்டு ஆராயப்படும் என அவர் அறிவித்துள்ளார். அதன்பின், தட்டுப்பாடின்றி சிலிண்டர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுமாம்.


