News August 6, 2024
பெட்ரோல் குண்டுவீச்சுக்கு இபிஎஸ் கண்டனம்

சேலம் மாவட்டம் எடப்பாடி காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு, எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக Xஇல் பதிவிட்டுள்ள அவர், மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல் நிலையத்திற்கே தற்போது பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் இந்த சம்பவத்திற்காக முதல்வர் ஸ்டாலின் வெட்கி தலைகுனிய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 15, 2026
தேர்தல் அறிவிப்பு.. ரயில் டிக்கெட்கள் காலி

தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என ECI அறிவித்துள்ளது. இதையடுத்து, வாக்களிப்பதற்கு சொந்த ஊர் செல்வதற்காக பலரும் IRCTC-ல் டிக்கெட் புக் செய்து வருகின்றனர். குறிப்பாக ஏப்.21, ஏப்.22 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு செல்வதற்கான டிக்கெட்கள் கடகடவென காலியாகி வருகின்றன. டிக்கெட் புக் செய்யாதவர்களே முந்துங்க..
News March 15, 2026
கேரளாவில் ஏப்.9-ல் வாக்குப்பதிவு

TN, புதுச்சேரியை போல அண்டை மாநிலமான கேரளா மற்றும் அசாம் மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படவுள்ளது. 140 தொகுதிகள் கொண்ட கேரளாவில் ஏப்.9-ல் வாக்குப்பதிவும், மே.4-ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. 126 தொகுதிகள் கொண்ட அசாமில் ஏப்.9-ல் வாக்குப்பதிவும், மே.4-ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News March 15, 2026
BIG NEWS: தமிழக தேர்தல் தேதி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக ஏப்.23-ம் தேதி (வியாழக்கிழமை) தேர்தல் நடைபெறும் என ECI அறிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 30-ல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்.6 கடைசி நாளாகும். அதற்கு அடுத்த நாள் (ஏப்.7) வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படவுள்ளன. ஏப்.9 வரை வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். மே 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். SHARE


