News August 6, 2024

தி.மலை மாணவி கண்டெடுத்த கற்கால கருவிகள்

image

தண்டராம்பட்டு அடுத்த அரசு உயர்நிலைப் பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவி சவுந்தர்யா நிலத்தில் விவசாயப் பணி மேற்கொண்டபோது, கற்காலத்தைச் சேர்ந்த இரண்டு கைக்கோடரிகளை கண்டெடுத்துள்ளார். இது 8,000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என தொன்மை பாதுகாப்பு மன்ற பொறுப்பாளரும் ஆசிரியருமான ரேவதி தெரிவித்துள்ளார்.

Similar News

News July 9, 2025

திருவண்ணாமலையில் நாளை எங்கெல்லாம் மின்தடை?

image

திருவண்ணாமலை தாலுகா தச்சம்பட்டு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 10) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தச்சம்பட்டு, காட்டாம்பூண்டி, பெரியகல்லபாடி, பாவுப்பட்டு, பறையம்பட்டு, தலையாம்பள்ளம், பழையனூர், வலசை, வேளையாம்பாக்கம், நவம்பட்டு, கண்டியாங்குப்பம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்னிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News July 8, 2025

இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம்

image

தி.மலை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்தில் உட்கோட்ட போலீஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி என்னும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.

News July 8, 2025

அண்ணாமலையார் கோயிலில் செல்போன் பயன்படுத்த தடை

image

தி.மலை அண்ணாமலையார் கோயிலில் செல்போன் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் புகைப்படம் எடுக்கவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தரிசனத்திற்காக இடைத்தரகர்கள் மற்றும் பிறரிடத்தில் பணம் தரக்கூடாது எனவும், பணம் வழங்கும் பக்தர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டும் எனவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!