News August 6, 2024

நிலைமை மோசமடைந்ததால் ஹசீனாவுக்கு அனுமதி

image

வங்கதேச விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் விளக்கமளித்தார். அதில், வங்கதேசமும், இந்தியாவும் பல ஆண்டுகளாக நட்பு நாடுகளாக இருப்பதாக கூறிய அவர், ஹசீனா வேண்டுகோள் விடுத்ததாலும், அங்கு நிலைமை மோசமடைந்ததாலும் அவருக்கு இந்தியாவுக்குள் அடைக்கலம் கொடுத்ததாக தெரிவித்தார். மேலும், இந்தியர்களின் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.

Similar News

News March 17, 2026

நயன்தாரா சர்ச்சை: நடிகர் சங்கம் கண்டனம்!

image

நடிகைகளை தரக்குறைவாக பேசுவது நாகரிகமான அரசியல் ஆகாது என தென்னிந்திய நடிகர் சங்கம் <<19406314>>சிவி சண்முகத்துக்கு<<>> கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையில், அரசியல் மேடைகளில் மாற்றுக் கருத்துக்களை முன்வைக்க பெண்களையும், நடிகைகளையும் அநாகரிகமாகச் சித்தரிப்பதுதான் உங்கள் கொள்கையா எனவும் கடுமையாக விமர்சித்துள்ளது. முன்னதாக, தனது கருத்துக்கு சிவி சண்முகம் வருத்தம் தெரிவித்திருந்தார்.

News March 17, 2026

‘தவறு செய்துவிட்டேன்’.. ஓபிஎஸ் மன்னிப்பு கேட்டார்

image

முந்தைய அதிமுக ஆட்சியில் EPS-க்கு ஆதரவளித்ததற்கு OPS மன்னிப்பு கேட்டுள்ளார். நெல்லை திமுக கூட்டத்தில் பேசிய அவர், நம்பிக்கையில்லா தீர்மானத்தில் EPS-க்கு தான் ஆதரவளித்தது மிகப்பெரிய தவறு என்றும், அவருக்கு எதிராக வாக்களித்திருந்தால் அதிமுக ஆட்சி கவிழ்ந்திருக்கும் என்றும் குறிப்பிட்டார். தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

News March 17, 2026

செந்தில் பாலாஜியிடம் சிபிஐ விசாரணை நிறைவு!

image

டெல்லியில் செந்தில் பாலாஜியிடம் நடைபெற்ற சிபிஐ விசாரணை முடிவடைந்தது. 6 மணி நேர விசாரணையில், கரூர் துயரத்திற்கு செந்தில் பாலாஜிதான் காரணம் என தவெகவினர் வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. குறிப்பாக, விஜய் பரப்புரையின் நடுவே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது தொடர்பாகவும், மக்கள் பாதிக்கபட்டது குறித்து எப்போது தகவல் கிடைத்தது; எப்போது ஹாஸ்பிடல் சென்றார் என்பது தொடர்பாகவும் கேட்கப்பட்டது.

error: Content is protected !!