News August 6, 2024
குடிபோதையில் கடலில் தவறி விழுந்து மீனவர் பலி

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தர்மராஜ் கடந்த 10 வருடமாக ரகு என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் டிரைவராக பணிபுரிந்து வருந்தார். கடந்த 3ஆம் தேதி கடலில் மீன்பிடித்த அவர், ரகுவிடம் பணம் வாங்கி மது அருந்திவிட்டு படகில் உறங்க சென்றுள்ளார். அப்போது, மது போதையில் கடலில் தவறி விழுந்துள்ளார். அவரது பிரேதம் இன்று கரை ஒதுங்கிய நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News September 19, 2025
சென்னை அம்மா உணவக பொதுமக்கள் வருகை அதிகரிப்பு

சென்னையில் தற்போது 383 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. மறுசீரமைப்புக்கு முன்பு 65 ஆயிரம் பேர் சாப்பிட்டு வந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை கூடியுள்ளது. தொடர்ந்து அம்மா உணவகங்களில் விற்பனை படிப்படியாக அதிகரித்து வருகிறது. தற்போது அம்மா உணவகங்களில் தினமும் சுமார் ஒரு லட்சம் பேர் சாப்பிடுகிறார்கள் 65 ஆயிரம் இருந்த எண்ணிக்கை தற்போது அதிகரித்து உள்ளதாக அம்மா உணவக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News September 19, 2025
சென்னை அருகே பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை

சூளைமேட்டை சேர்ந்த சங்கீதா என்பவருக்கு ஹாரிஸ் என்பவருடன் 02.02.25 திருமணமானது. பெற்றோர் 100 சவரன் தங்க நகை கொடுத்தும், ஹாரிஸ் மற்றும் தாயார் 200 சவரன், 2 கிலோ வெள்ளி, நிலம் கேட்டு கொடுமைப்படுத்தி அப்பெண்ணை வீட்டைவிட்டு வெளியேற்றி, பின் அவர் வீட்டிலும் சென்று சங்கீதாவை தாக்கியதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் வரதட்சணை தடுப்பு குழு விசாரணையில் ஹாரிஸ் கைது செய்யப்பட்டு நேற்று சிறையில் அடைத்தனர்.
News September 19, 2025
பனைமரங்களை வெட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம்

தமிழக அரசு பனை மரங்களை வெட்டுவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. தவிர்க்க முடியாத சூழலில் பனை மரத்தை வெட்ட நேரிட்டால், மாவட்ட அளவிலான குழுவின் அனுமதி அவசியம். இந்தக் குழு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூடி விவாதிக்கும். ஒரு மரத்தை வெட்டினால், அதற்கு ஈடாக 10 மரக்கன்றுகள் நடப்பட வேண்டும். மாவட்ட குழுவின் முடிவே இறுதியானது. அனுமதி பெற்ற பின்னரே மரத்தை வெட்ட வேண்டும்.