News August 6, 2024
அரசு அங்காடியில் ரூ.16 லட்சத்திற்கு பட்டுக் கூடுகள் விற்பனை

தர்மபுரி நான்கு ரோடு பகுதியில் பட்டு வளர்ச்சித் துறையின் சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடு அங்காடியில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் 3,754 கிலோ பட்டுக்கூடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். பட்டுக்கூடுகள் அதிகபட்சமாக கிலோ 523 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக கிலோ 231 ரூபாய்க்கும், சராசரியாக கிலோ 435 ரூபாய்க்கும் என மொத்தமாக ரூ.16,33,110 பட்டுக்கூடுகள் விற்பனையானது.
Similar News
News March 15, 2026
‘சிலிண்டருக்கு’ மாலை போட்டு CPI கட்சியினர் போராட்டம்!

கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து, தருமபுரி தொலைபேசி நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் கலைச்செல்வம் தலைமையில் நடந்த இதில், சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன முறையில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. சிலிண்டர் தட்டுப்பாட்டைப் போக்கவும், விலையைக் குறைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
News March 15, 2026
‘சிலிண்டருக்கு’ மாலை போட்டு CPI கட்சியினர் போராட்டம்!

கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து, தருமபுரி தொலைபேசி நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் கலைச்செல்வம் தலைமையில் நடந்த இதில், சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன முறையில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. சிலிண்டர் தட்டுப்பாட்டைப் போக்கவும், விலையைக் குறைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
News March 15, 2026
தருமபுரி: காட்டுப்பன்றி மோதி விவசாயி கொடூர பலி

தருமபுரி மாவட்டம், திருமல்வாடி கிராமத்தைச் சேர்ந்த மாதப்பன் (64) என்ற விவசாயி, நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் தோட்டத்திற்குச் சென்றபோது, குறுக்கே வந்த காட்டுப்பன்றிகள் மோதி நிலைதடுமாறி விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


