News August 6, 2024
இந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று, வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் ( மணிக்கு 30 – 40 கி.மீ. வேகம்) மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூரில் கனமழை பெய்யலாம் என்றும் கணித்துள்ளது.
Similar News
News March 16, 2026
தமிழகத்தில் 4 மாவட்ட SP-க்கள் அதிரடி மாற்றம்

கரூர், ஈரோடு, நாகை, விருதுநகருக்கு புதிய SP-க்களை நியமித்து ECI உத்தரவிட்டுள்ளது. கரூர்: ஹரிகிரண் பிரசாத், ஈரோடு: கிரண் ஸ்ருதி, நாகை: சுர்ஜித் குமார், விருதுநகர்: ஸ்ரீநாதா ஆகியோர் SP-க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, கரூர் SP ஜோஷ் தங்கையா பாரபட்சமாக செயல்படுவதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டியிருந்தார். மாற்றப்பட்ட SP-க்கள் தேர்தல் தொடர்பான வேறு எந்த பணியிலும் ஈடுபடக்கூடாது எனவும் ECI கூறியுள்ளது.
News March 16, 2026
பதவி பறிக்கப்படும்: ஸ்டாலின் எச்சரிக்கை

தேர்தல் முடியும் வரை எந்த உள்கட்சி பிரச்னையும் இருக்கக்கூடாது என்று திமுக மா.செ.,க்களுக்கு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தேவையின்றி குழப்பமோ, பிரச்னையோ உண்டாக்கி அது என் காதுகளுக்கு வந்தால், எந்த பெரிய பொறுப்புகளில் இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை பாயும் என்று எச்சரித்துள்ளார். அதிக வெற்றியை பெற்று தருபவர்களுக்கே அமைச்சர் பதவி என்றும் அவர் அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார்.
News March 16, 2026
வீட்டு சிலிண்டர்.. நாட்டு மக்களுக்கு அரசு அறிவிப்பு

நாட்டில் நிலவும் கேஸ் தட்டுப்பாடு குறித்து மக்கள் பதற்றமடைய வேண்டாம் என மத்திய பெட்ரோலியத் துறை மீண்டும் அறிவுறுத்தியுள்ளது. மேலும், சிலிண்டர் பதுக்குதல், கள்ளச் சந்தையில் விற்பதை தடுக்க மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேவை இல்லாத நிலையிலும் பீதியுடன் முன்பதிவு செய்வதை மக்கள் தவிர்க்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. SHARE IT


