News August 6, 2024

அடுத்தடுத்த கொலைகளால் நெல்லையில் பதற்றம்

image

நெல்லையில் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் அரங்கேறி வருவதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர். தீபக் ராஜா கொடூரக்கொலை, சாதி ரீதியிலான கொலைகள் என தொடர் சம்பவங்கள் நிகழ்ந்த நிலையில், நேற்றிரவு மேலப்பாளையம் சையது தமீம் என்ற இளைஞரை, மர்ம கும்பல் கொடூரமாகக்கொலை செய்துள்ளது. அங்கு பதற்றமான சூழல் நிலவும் நிலையில், குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.

Similar News

News January 25, 2026

டி20 WC-ல் இருந்து பாகிஸ்தான் விலகலா?

image

வங்கதேசத்திற்கு அநியாயம் நடந்துள்ளது. ICC இரட்டை நிலைப்பாட்டுடன் இருக்க கூடாது என பாக்., கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார். ஒரு அணி (இந்தியா) என்ன முடிவென்றாலும் எடுக்கலாம், அதற்கு சரி என்று அனுமதிப்பீர்கள்; ஆனால் மற்றொரு அணி அதைசெய்ய அனுமதி கிடையாதா என்றும், பாகிஸ்தானும் டி20 WC-ல் இருந்து விலகுமா என்பது அரசாங்கத்தின் முடிவில் தான் இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

News January 25, 2026

TTV-க்கு 300 ‘C’ சாக்லேட்டுகள் கொடுக்கப்பட்டன: புகழேந்தி

image

ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட அன்புமணி, தினகரன் ஆகியோருடன் ஒரு கூட்டணிக்காக PM மோடி கைகோர்க்கலாமா என முன்னாள் அதிமுக MLA புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இப்போது அதிமுக என்ற கட்சியே இல்லை; அதை EPS அணி என்றுதான் அழைக்க வேண்டும் என்றும், நேற்று EPS-ஐ, ‘அண்ணன்’ என்று அழைத்து, கூட்டணி அமைத்ததற்காக TTV தினகரனுக்கு 300 ‘சி’ சாக்லேட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.

News January 25, 2026

ஜனவரி 25: வரலாற்றில் இன்று

image

*1980 – அன்னை தெரேசாவிற்கு இந்தியாவின் பாரத ரத்னா என்ற மிக உயரிய விருது வழங்கப்பட்டது. *1971 – இந்தியாவின் 18-வது மாநிலமாக இமாசலப் பிரதேசம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. *1949 – முதலாவது எம்மி விருதுகள் வழங்கப்பட்டன. *1999 – மேற்கு கொலம்பியாவில் இடம்பெற்ற 6.0 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 1000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். *1994 – நாசாவின் ‘கிளமென்டைன் விண்கலம் சந்திரனை நோக்கி ஏவப்பட்டது.

error: Content is protected !!