News August 6, 2024
சசிகலா பேரணி என்ன ஆனது?

தேர்தல்களில் அதிமுக பின்னடைவை சந்தித்ததை
சுட்டிக்காட்டி, கட்சிக்குள் இருக்கும் பிளவுதான் இதற்கு காரணம், அதனால் கட்சியில் ஒற்றுமையை ஏற்படுத்த பேரணி செல்லப்போவதாக சசிகலா தெரிவித்திருந்தார். அதன்படி, தென்காசியில் கடந்த மாதம் 17ஆம் தேதி பேரணியையும் தொடங்கினார். ஆனால், அதன்பிறகு சத்தமே இல்லை. இதனால் தற்போது பேரணியை சசிகலா தொடர்கிறாரா, இல்லையா எனத்தெரியாமல், அவரது ஆதரவாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
Similar News
News March 18, 2026
BREAKING: தமிழ்நாடு தேர்தலில் அதிரடி மாற்றம்

ECI வழங்கும் பூத் ஸ்லிப்பில் இந்த முறை வாக்காளரின் போட்டோ இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் வரிசை எண்ணை அறிந்துக் கொள்வதற்காக புகைப்படத்துடன் பூத் சிலிப் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், அதற்கு பதிலாக வாக்காளர் பெயர் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வாக்காளர் தகவல் சீட்டு (voter Information Slip) இந்தாண்டு அச்சிட்டு வழங்கப்படுகிறது. ஆனால், இதை வாக்களிப்பதற்கான ஆவணமாக காண்பிக்க முடியாது.
News March 18, 2026
நான்கரை வயது சிறுவன் பலி.. சீறிய நயினார்

மருத்துவத் துறையை சீரழித்து மக்கள் உயிருடன் விளையாடும் திமுகவிற்கு ஒட்டுமொத்தமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். திருச்சி கண்ணனூரில் டாக்டர் இல்லாததால் நான்கரை வயது சிறுவன் பலியான சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்தார். உலகமே போற்றும் மருத்துவக் கட்டமைப்பு என ஐந்தாண்டுகளாக வீண் பெருமை பேசும் திமுக அரசு போதிய டாக்டர்களைக்கூட நியமிக்கவில்லை என்றும் சாடியுள்ளார்.
News March 18, 2026
FLASH: அதிமுக EX அமைச்சர்கள் 7 பேருக்கு எதிராக மனு!

அதிமுக EX அமைச்சர்கள் 7 பேர் உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளை ED விசாரிக்க உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திமுக MP கிரிராஜன் இந்த மனுவைத் தொடர்ந்துள்ளார். SP வேலுமணி, தங்கமணி, MR விஜயபாஸ்கர், KP அன்பழகன், C விஜயபாஸ்கர், காமராஜ், KC வீரமணி ஆகியோர் மீதான வழக்குகளை லஞ்ச ஒழிப்புத்துறை(DVAC) விசாரித்து வரும் நிலையில், இந்த மனுவானது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


