News August 5, 2024
இலங்கையில் நடந்த அதே சம்பவம்..!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், அவரது வீட்டிற்குள் புகுந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை அள்ளிச் சென்றனர். இதேபோன்ற சம்பவம் 2022இல் இலங்கையில் நடந்தது. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த இலங்கையில் போராட்டம் வெடித்ததையடுத்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பிச் சென்றார். அப்போது அவரது வீட்டிற்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பொருட்களை அள்ளிச் சென்றனர்.
Similar News
News March 18, 2026
அனைத்து ரேஷன் கார்டுக்கும்.. புதிய அறிவிப்பு

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு பெரிய வசதியை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. பல்வேறு சேவைகளை ஒரே இடத்தில் வழங்கும் UMANG App-ல், இப்போது ‘மேரா ரேஷன்’ என்ற அம்சத்தை மத்திய அரசு சேர்த்துள்ளது. இதன் மூலம் ரேஷன் அட்டை தொடர்பான எந்தவொரு பணிக்காகவும் அரசு அலுவலகங்களுக்கோ, ரேஷன் கடைகளுக்கோ செல்வதற்கு பதிலாக, உமாங் செயலி மூலம் உங்கள் மொபைல் போனிலேயே ரேஷன் சேவைகளை பெறலாம்.
News March 18, 2026
கார்கே, சரத் பவாரை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்: PM மோடி

ராஜ்யசபா பதவிக்காலம் முடியலாம், ஆனால் அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே இல்லை என ஓய்வுபெறும் 37 ராஜ்யசபா MP-களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் PM மோடி பேசினார். தேவகவுடா, மல்லிகார்ஜுன கார்கே, சரத் பவார் ஆகியோர் தங்கள் வாழ்நாளின் பாதி காலத்தை பார்லிமெண்ட் பணிகளிலேயே செலவிட்ட தலைவர்கள் என்றார். புதிதாக தேர்வாகியுள்ள MP-க்கள் இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
News March 18, 2026
தங்கம் விலை மேலும் குறைந்தது

போர் பதற்றத்திற்கு மத்தியிலும் தங்கம் விலையானது தொடர்ந்து சரிந்து வருகிறது. அந்த வகையில், கடந்த 11-ம் தேதி சவரன் ₹1,20,960-க்கு விற்பனையான தங்கம் 7 நாள்களில் ₹4,074 குறைந்து ₹1,16,560 ஆக உள்ளது. தற்போதைய நிலவரப்படி சர்வதேச சந்தையில் 1 அவுன்ஸ்(28g) $9 குறைந்து $4,990 ஆக உள்ளது. இதே நிலை நீடித்தால் நாளையும் நம்மூர் சந்தையில் தங்கம் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


