News August 5, 2024

போக்சோ குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு

image

ராணிப்பேட்டை மாவட்ட சமூக நலத்துறை சார்பில் நெமிலி தாலுகா மேலேரி கிராமத்தில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் வி.ஏ.ஓ விநாயகமூர்த்தி ஊராட்சி செயலாளர் சிவலிங்கம் கலந்து கொண்டனர் . மாவட்ட சமூக பாதுகாப்பு பணியாளர் பார்த்திபன் கலந்து கொண்டு போக்சோ சட்டம் குறித்து பள்ளி மாணவருக்கும் கிராம மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.

Similar News

News March 7, 2026

ராணிப்பேட்டையில் ரேஷன் பிரச்னையா..? உடனே CALL!

image

ராணிப்பேட்டை மக்களே.., உங்களது ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் மற்றும் ரேஷன் கடை மீது எந்த வித புகார்கள் இருந்தாலும் 1967 (அ) 1800-425-5901 எனும் கட்டணமில்லா எண்ணை அழைத்து உங்களது புகாரை தெரிவிக்கலாம். ஏதேனும் முறைகேடு நடந்தாலும் சரியான ஆவணங்களுடன் உங்களது புகார்களை தெரிவிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 7, 2026

ராணிப்பேட்டை: 7 சவரன் நகை கொள்ளை

image

சோளிங்கர் அருகே பரவத்துார் பகுதியை சேர்ந்தவர் கோகிலா (45) . இவர் கடந்த மார்ச் 4ம் தேதி அவசர தேவைக்காக பையில் 7 சவரன் நகை மற்றும் ₹13,000 பணத்துடன், பாராஞ்சியில் உள்ள தனியார் வங்கிக்கு அடகு வைக்க நடந்து சென்றுகொண்டிருந்தார் . அப்போது, கோகிலாவை பின் தொடர்ந்து, டூ வீலரில் ஹெல்மெட் அணிந்து வந்த 3 மர்ம நபர்கள் அவரை கீழே தள்ளிவிட்டு அவரது பையை பறித்து சென்றனர்.இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 7, 2026

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 6) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!