News August 5, 2024
பூம்புகார் விற்பனை நிலையத்தில் கலெக்டர் ஆய்வு

சேலம், அண்ணா பட்டு மாளிகை வளாகத்தில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தினை தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக்கழக மேலாண்மை இயக்குநர் அமிர்தஜோதி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். பிருந்தாதேவி ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது துறை சார்ந்த அதிகாரிகள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Similar News
News July 4, 2025
சேலம் – திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

திருச்செந்தூர் முருகன் திருக்கோயிலில் வரும் ஜூலை 07- ஆம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு சேலத்தில் இருந்து திருச்செந்தூருக்கு 50 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஜூலை 06- ஆம் தேதி முதல் ஜூலை 08- ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசுப் போக்குவரத்து கழகத்தின் சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News May 8, 2025
கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்!

சேலம் மாவட்டத்தில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தங்களைப் பற்றிய முழுமையான விவரங்களுடன் உரிய பட்டப்படிப்பு, கால்நடை, மருத்துவ கவுன்சில் சான்றிதழ்களுடன் வரும் மே 22- ஆம் தேதி நடைபெறும் நேரடி நியமன தேர்வில் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News May 8, 2025
ஆறகளூர் அதிசயம்: கடன் பறந்தோடும்!

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே ஆறகளூரில் காமநாதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வீற்றிருக்கும் கால பைரவர் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக பக்தர்களால் போற்றப்படுகிறார். அஷ்டமி திதியில் 11 தீபங்கள் ஏற்றி கால பைரவரை வழிபட்டு வந்தால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கடன் பிரச்சனையில் இருக்கும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!