News August 5, 2024
‘மீனாட்சி பொண்ணுங்க’ சீரியல் முடிவடைந்தது

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான ‘மீனாட்சி பொண்ணுங்க’ தொடர் நேற்றுடன் முடிவடைந்துள்ளது. கணவரால் ஏமாற்றப்பட்ட பெண் தனது 4 மகள்களையும் வளர்த்து, சமுதாயத்தில் முன்னுக்கு வருவதே இத்தொடரின் கதை. இதில் சௌந்தர்யா ரெட்டி முதன்மைப் பாத்திரத்திலும், ஆர்யன், சுகன்யா, தீபா சங்கர் ஆகியோர் முக்கிய பாத்திரத்திலும் நடித்திருந்தனர். ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்ற இத்தொடர் முடிந்துள்ளதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
Similar News
News March 20, 2026
தஞ்சாவூர்: கதண்டு கடித்து 4 பேர் காயம்

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வீரசோழன் ஆற்றங்கரையில் உள்ள அரசு மதுபானக்கடை அருகே கதண்டு தாக்கியதில் 4 பேர் காயமடைந்தனர். கோவிந்தபுரம், மணஞ்சேரி, விஸ்வநாதபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுதாகர் (38), செல்வகுமார் (36), கோவிந்தன் (65), கண்ணன் (56) ஆகியோர் கதண்டு கடித்ததில் காயமடைந்துள்ளனர். மேலும் தற்போது அவர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
News March 20, 2026
பெரம்பலூர்: வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு

தமிழகம் முழுவதும் வருகிற ஏப்.23-ம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பொது பார்வையாளர் நேகா பன்சால், பெரம்பலூரில் உள்ள வாக்குச் சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில், அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
News March 20, 2026
தஞ்சாவூர்: கதண்டு கடித்து 4 பேர் காயம்

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வீரசோழன் ஆற்றங்கரையில் உள்ள அரசு மதுபானக்கடை அருகே கதண்டு தாக்கியதில் 4 பேர் காயமடைந்தனர். கோவிந்தபுரம், மணஞ்சேரி, விஸ்வநாதபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுதாகர் (38), செல்வகுமார் (36), கோவிந்தன் (65), கண்ணன் (56) ஆகியோர் கதண்டு கடித்ததில் காயமடைந்துள்ளனர். மேலும் தற்போது அவர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


