News August 5, 2024

பணி நியமன ஆணை வழங்கல்

image

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் கலெக்டர் கிருஸ்துராஜ் மனுக்களை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து 17 மருத்துவ அலுவலர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பணிகளை பாராட்டி சான்றிதழையும், பணியின் போது உயிரிழந்த இரண்டு நபர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.

Similar News

News January 31, 2026

திருப்பூர்: பெண்களுக்கு ரூ.3 லட்சம் வட்டியில்லா கடன்!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற<> இங்கே கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். (ஷேர் பண்ணுங்க)

News January 31, 2026

திருப்பூர்: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

image

திருப்பூரில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்த சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். SHARE பண்ணுங்க!

News January 31, 2026

குன்னத்தூர் மாணவன் சம்பவத்திற்கு போலீசார் விளக்கம்

image

குன்னத்தூரைச் சேர்ந்த 8-ஆம் வகுப்பு மாணவன் ஒருவனை, சக மாணவர்கள் சாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தி எரியும் குப்பைக்குழியில் தள்ளிவிட்டதாகச் வெளியான செய்திக்குத் திருப்பூர் மாவட்டக் காவல் துறை மறுப்பு தெரிவித்துள்ளது. காவல் துறை நடத்திய விசாரணையில், காயம் அடைந்த 13 வயது மாணவனும் மற்ற மாணவர்களும் ஒரே வகுப்பில் படிக்கும் நெருங்கிய நண்பர்கள் என்பதும். ஜாதி பெயரை சொல்லி திட்டவில்லை என போலீஸ் தகவல்.

error: Content is protected !!