News August 5, 2024
அதிமுக முன்னாள் அமைச்சரின் வழக்கு ஒத்திவைப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாகவும், அனுமதியின்றி போராடியதாகவும் 2022-யில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது வழக்கு ஒன்று பதியப்பட்டது. தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மனு தாக்கல் ஒன்று செய்திருந்தார். அந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றம் வந்த நிலையில் தீர்ப்பு ஒத்தி வைத்து உத்தரவிட்டப்பட்டது.
Similar News
News March 13, 2026
சென்னை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (மார்ச்.13) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.13) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 13, 2026
சென்னை: ரேஷன் அட்டையில் திருத்தமா?

சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் & நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் நாளை பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ள இந்த முகாமில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல்/ பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை / நகல் அட்டை, கைப்பேசி எண் பதிவு ஆகியவற்றில் மாற்றம் செய்யலாம். ஷேர் பண்ணுங்க.
News March 13, 2026
சென்னை: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை!

சென்னை திருவொற்றியூரை சேர்ந்தவர் அசோக்குமார் (38). இவர் அதேப் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது கடைக்கு நேற்று அதேப் பகுதியை சேர்ந்த +1 படிக்கும் 17 வயது மாணவி, பொருள் வாங்க வந்த போது, அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த மாணவி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் அசோக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


