News August 5, 2024

ஈரான் மசூதியில் சிகப்பு கொடி.. இதுதான் அர்த்தமா?

image

ஈரானில் ஹமாஸ் படை தலைவர் இஸ்மாயில் ஹனியா, ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த படுகொலையை இஸ்ரேல் அரங்கேற்றி இருக்கும் எனக் கருதும் ஈரான், இதற்கு விரைவில் பழிதீர்க்கப்படும் என அறிவித்திருந்தது. இந்நிலையில், பழிவாங்கலை பிரகடனப்படுத்தும் விதமாக ஈரானில் உள்ள மசூதியில் சிகப்புக் கொடி இன்று ஏற்றப்பட்டது. இதையடுத்து, ஈரானின் தாக்குதலை எதிர்கொள்ள இஸ்ரேல் தயாராகி வருகிறது.

Similar News

News January 20, 2026

செங்கல்பட்டு: தலையில் ரத்தம் சொட்ட சொட்ட சரிந்த நபர்

image

செங்கல்பட்டு அடுத்த சின்னமேலமையூர் பகுதியை சேர்ந்தவர் அஜய் (26). இவர் ராட்டிணங்கிணறு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்குவதற்காக வரிசையில் நின்றுளார். அவருக்கு பின்னால் 3 இளைஞர்கள் ஏற்கனேவே மதுபோதையில் நின்றுள்ளனர். மேலும், அஜியிடம் வீண் தகராறு செய்து பீர் பாட்டிலால் சரமாரியாக தாக்கியுள்ளனர். மண்டை உடைந்து ரத்தம் வடிந்த நிலையில் மயங்கி விழுந்த அஜய் மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

News January 20, 2026

சற்றுமுன்: பணம் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்

image

வடகிழக்கு பருவமழை & டிட்வா புயல் மழையால் பல்வேறு இடங்களில் சாலைகள் சேதமடைந்தன. இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள சேதமடைந்த சாலைகளை சீரமைக்க தமிழக அரசு ₹1,000 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த நிதியின் மூலம் அனைத்து சாலைகளையும் உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, பிப்.1 முதல் சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கும் என தகவல்கள் கூறுகின்றன.

News January 20, 2026

திட்டமிட்டு TN-ல் போதை பொருள் சப்ளை: விசிக

image

போதைக்கு எதிராக அனைவரும் கிளர்ந்தெழ வேண்டிய காலம் இது என விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச்செல்வன் தெரிவித்துள்ளார். இது மிகப்பெரிய பண்பாட்டு யுத்தமாக மாறியுள்ளதாக கூறிய அவர், நாட்டின் பல்வேறு பகுதிகளில் தமிழகத்தை நோக்கி திட்டமிட்டு போதைப் பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது என்றார். மேலும், இவ்விவகாரத்தில் தமிழக அரசு இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!