News August 5, 2024
கோலி, ரோஹித்துக்கு ஓய்வு கொடுத்திருக்கலாம்: நெஹ்ரா

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு ஓய்வு கொடுத்திருக்க வேண்டும் என நெஹ்ரா கூறியுள்ளார். இந்தியா அடுத்ததாக ஒருநாள் தொடரில் 2 -3 மாதங்களுக்கு பின்னரே விளையாட உள்ள நிலையில் இத்தொடரில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு கொடுத்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என்றார். மேலும், கம்பீரின் முடிவை தவறு என சொல்லவில்லை என்ற அவர், இது அவரது ஒரு திட்டமாகக் கூட இருக்கலாம் என்றார்.
Similar News
News January 16, 2026
முதல்முறையாக Sunday-ல் பங்குச்சந்தை

பிப்ரவரி 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பங்குச் சந்தைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை கணக்கில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வர்த்தக நேரத்தில் (காலை 9:15 முதல் மாலை 3:30 வரை) எந்த மாற்றமும் இருக்காது என்றும், பங்குச் சந்தை ஞாயிற்றுக்கிழமையில் இயங்குவது நாட்டின் வரலாற்றில் முதல்முறை என்றும் நிதி வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
News January 16, 2026
ஓய்வுபெற்ற ஊழியர்களிடம் பகீர் மோசடி!

இந்திய ரயில்வேயில் ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு மரியாதை அளிக்கும் விதமாக வழங்கப்பட்ட தங்க முலாம் பூசிய வெள்ளி நாணயத்தில் அதிர்ச்சியூட்டும் மோசடி நடந்துள்ளது. உண்மையில் அவை செம்பினால் செய்யப்பட்ட போலி நாணயங்கள் என்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக Ex. ரயில்வே ஊழியர் அளித்த புகாரின் பேரில், FIR பதியப்பட்டுள்ளது. சுமார் ₹2,000 மதிப்புள்ள நாணயத்தில், வெறும் 0.23% மட்டுமே இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
News January 16, 2026
சற்றுமுன்: SBI சேவைக் கட்டணம் உயர்ந்தது

சமீபத்தில் ATM கட்டணங்களை SBI உயர்த்திய நிலையில், IMPS சேவைகளுக்கான கட்டணமும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இலவசமாக இருந்த ₹25,000 – ₹1 லட்சம் வரையிலான IMPS பணப் பரிமாற்றத்திற்கு இனி ₹2 + ஜிஎஸ்டி கட்டணமாக செலுத்த வேண்டும். ₹1 லட்சம் – ₹2 லட்சம் வரை ₹6 + ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். மல்டிபிள் சம்பளம் & சிறப்பு கணக்கு வகைகளுக்கு முற்றிலும் இலவசம். இந்த நடைமுறை பிப்.15 முதல் அமலுக்கு வருகிறது.


