News August 5, 2024
23 துணை தாசில்தார்கள் பணியிட இடமாற்றம்

விழுப்புரம் மாவட்டத்தில் வருவாய் துறையில் நிர்வாக காரணங்களுக்காக தொடர்ந்து பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் 23 துணை தாசில்தார்கள் இடமாற்றம் மற்றும் 12 பேருக்கு பதவி உயர்வு அளித்து ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து இன்னும் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் வருவாய் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Similar News
News July 11, 2025
சாலையோரம் கிடந்த குழந்தை

விழுப்புரம் மாவட்டம். வளவனுார் அடுத்த வி.பூதூர் ஊராட்சியில், கிராம மக்கள் நேற்று 100 நாள் வேலை செய்து கொண்டு இருந்த போது, சாலையோரம் குழந்தையின் அழுகுரல் கேட்டு, துணியால் சுற்றப்பட்டு இருந்த குழந்தையை கண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் குழந்தையை மீட்டு யார் அந்த குழந்தையை வீசி சென்றது என விசாரித்து வருகின்றனர்.
News July 11, 2025
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பொது விநியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு விழுப்புரம் மாவட்டத்தில் வருகின்ற ஜூலை 12 ஆம் தேதியன்று குறைதீர் முகாம் நடத்தப்படவுள்ளது. இதில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், எண் மாற்றம் போன்ற பணிகளை ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும் இது நடத்தப்படும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
News July 11, 2025
விழுப்புரம்: இரவு நேர ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஜூலை 10) இரவு 10:00 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவல் அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் அல்லது 100 அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.