News August 5, 2024

நெல்லையில் சோலார் மின் உற்பத்தியில் புதிய உச்சம்

image

நெல்லை மின் பகிர்மான வட்டம் சார்பில் இன்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், “சூரிய மின்சக்தியில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. 02.08.2024 அன்று 5704 MW மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய சாதனையான 5512 MW ஐ (24.07.2024) விட அதிகம். மேலும், நேற்று மட்டும் 40.9 MU மின்சாரம் மின் வலையமைப்பில் உறிஞ்சப்பட்டது. இது புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு பெரிய மைல்கல் ஆகும்” என கூறப்பட்டுள்ளது

Similar News

News February 9, 2026

நெல்லை: கட்டாயம் உங்கள் போனில் இருக்க வேண்டிய எண்கள்!

image

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.

News February 9, 2026

திருநெல்வேலி: மர்மமான முறையில் ஒருவர் கொலை

image

நெல்லை மூன்றடைப்பு காவல் நிலைய சரகம் பாணாங்குளத்தில் நேற்று இரவு இசக்கி பாண்டி(48) என்ற நபர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். மூன்றடைப்பு காவல்துறையினர் சம்பவ இடம் சென்று இறப்பிற்கான காரணம் குறித்தும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் குறித்தும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மர்ம நபர்கள் அவரை கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

News February 9, 2026

திருநெல்வேலியில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு!

image

நெல்லை, பாளையங்கோட்டை ராஜா குடியிருப்பை சேர்ந்தவர் விக்னேஷ்வர் (29). இவரிடம் பாரத் (26) என்பவர் மது அருந்த பணம் கேட்டுள்ளார். விக்னேஷ்வர் பணம் தர மறுத்த காரணத்தால் அரிவாளால் தாக்கி கொலை செய்ய முயற்சித்ததாக விக்னேஷ்வர் கொடுத்த புகாரின் பேரில் பாளை போலீசார் பரத்தை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.

error: Content is protected !!