News August 5, 2024
அரசு பேருந்துகளில் அலை மோதும் மக்கள் கூட்டம்

பராமரிப்பு பணி காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக விடுமுறை நாட்களில் மட்டும் ரத்து செய்யப்பட்டு வந்த ரயில் சேவை, முதல் முறையாக வேலை நாளான இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பல்லாவரத்தில் இருந்து தாம்பரம் மார்க்கமாக கூடுவாஞ்சேரி வரையும் கூடுவாஞ்சேரியில் இருந்து தாம்பரம் மார்க்கமாக பல்லாவரம் வரையிலான மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
Similar News
News March 11, 2026
செங்கை: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

நில வரி வசூலிப்பது, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கங்களிடமிருந்து பொதுமக்களுக்கு கடன் வாங்கி கொடுப்பது VAO வேலையாகும். இவற்றை முறையாக செய்யவில்லை என்றால், லஞ்சம் கேட்டாலும் (044-22311049) புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
News March 11, 2026
செங்கை: அதிமுக எம்.பி மாநிலங்களவையில் கோரிக்கை!

கல்பாக்கம் அணுசக்தி நிலையத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. தனபால் நேற்று கோரிக்கை வைத்துள்ளார். நீண்ட காலமாக பணியாற்றியும் நிரந்தர வேலை வாய்ப்பு வழங்கப்படாத நிலை குறித்து அவர் கவலை தெரிவித்தார். அதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
News March 11, 2026
செங்கல்பட்டில் சிறுவன் துடிதுடித்து பலி!

வண்டலூர்: கேளம்பாக்கம் அருகே சிறுசேரி பகுதியில், அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்கி கட்டிட வேலைகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் சிறுசேரி பகுதியில் அசாம் மாநிலத்தை சேர்ந்த அடாடத் சிக்டன் (17) வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி அடாடத் சிக்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்த கேளம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


