News August 5, 2024
தரங்கம்பாடி செம்பனார்கோவிலை வந்தடைந்த காவிரி நீர்

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் காவிரி ஆற்றில் அமைந்துள்ள தண்ணீர் பிரிக்கும் ராஜேந்திரன் நீர் ஒழுங்கியை காவிரி நீர் இன்று (5/8/2024) காலை சரியாக 9 மணி அளவில் வந்தடைந்தது. அவ்வாறு வந்த காவிரி தாயை பொதுபணித்துறை அதிகாரி மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சியுடன் மலர் தூவி வரவேற்றனர். ஆடிப்பெருக்கு முடிந்து இரண்டு நாட்களுக்கு பிறகு தண்ணீர் வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 25, 2026
மயிலாடுதுறை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க.
News January 25, 2026
மயிலாடுதுறை: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.
News January 25, 2026
மயிலாடுதுறை: கோழி கொட்டகை அமைக்க 100% மானியம்!

மயிலாடுதுறை, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த MGNREGA திட்டத்தின் கீழ், கோழிக் கொட்டகை 100 % மானியத்துடன் கட்டித் தரப்படுகிறது. இதில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும். இதில் பயன்பெற விரும்புவோர் தங்கள் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம். இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!


