News August 5, 2024
கோவை மேயர்: யார் இந்த ரங்கநாயகி?

கோவை மாநகராட்சியின் திமுக கூட்டணியின் மேயர் வேட்பாளராக 29வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரங்கநாயகி அறிவிக்கப்பட்டார். தரணி நகர் 8வது வீதி, கணபதிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர்தான் ரங்கநாயகி. 10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள ரங்கநாயகியின் கணவர் ராமச்சந்திரன். இவர் 29வது வார்டு திமுக செயலாளராக இருக்கிறார். இத்தம்பதிக்கு குகன், வாகிணி என 2 பிள்ளகள் உள்ளனர். இவரது செயல்பாடு எப்படி? கமெண்ட் பண்ணுங்க!
Similar News
News March 12, 2026
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (11.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 11, 2026
கோவை சம்பவம்: அன்புமணி கண்டனம்

கோவை அரசு பள்ளி சத்துணவில் பல்லி விழுந்து 44 மாணவர்கள் மயக்கமடைந்த சம்பவத்திற்குப் பாமக தலைவர் அன்புமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “திமுக அரசு வழங்குவது சத்துணவா அல்லது விஷ உணவா?” என தனது ‘X’ தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். மாணவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினாலும், அசம்பாவிதம் நேர்ந்திருந்தால் என்னவாகியிருக்கும் என நினைக்கவே நெஞ்சம் பதறுவதாக அவர் வேதனையை பகிர்ந்துள்ளார்.
News March 11, 2026
கோவை: உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

கோவை மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி <


