News August 5, 2024
நெல்லையில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகள்

நெல்லை மாவட்டம் பழவூரில் உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் விளையாட்டு போட்டிகள் நேற்று நடைபெற்றது. உலக சிலம்ப விளையாட்டு சங்க நிறுவனத் தலைவர் சுதாகரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அளவில் நடைபெற்ற இந்த போட்டியினை பழவூர் பஞ்சாயத்து தலைவர் சுப்புலட்சுமி தொடங்கி வைத்தார். மாவட்டத்திலிருந்து ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News January 19, 2026
நெல்லை: ஆசையை தூண்டி ரூ.30 லட்சம் மோசடி செய்த பெண்

நெல்லையைச் சேர்ந்த 37 வயதான இளைஞரிடம் தர்ஷினி என்ற பெண் வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டு ஷேர் மார்க்கெட்டிங் முதலீடு செய்ய ஆசையை தூண்டினார். முதலில் ரூ.6000 முதலீடு செய்து, அந்த பணத்தை எடுக்க விதிக்கப்பட்ட நிபந்தனைகளின் படி மேலும் மேலும் வெவ்வேறு வங்கி கணக்குகளில் ரூ.30 லட்சம் செலுத்தி மீட்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் படி சைபர் க்ரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 19, 2026
நெல்லை: நாய் குறுக்கே பாய்ந்ததால் ஒருவர் பலி!

கீழகோவிலான்புரத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (45). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சவலைக்காரன் குளம் அருகே பைக்கில் சென்றபோது நாய் குறுக்கே பாய்ந்தது. இதனால் தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சைக்கு பலன் இன்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். விபத்து குறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.
News January 19, 2026
நெல்லை: 12th போதும்., ஆதாரில் வேலை! தேர்வு இல்லை..

நெல்லை மக்களே, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) காலியாக உள்ள 282 ஆதார் சூப்பர்வைசர் /ஆபரேட்டர் பணியிடங்ளுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 வயது பூர்த்தியடைந்த ஐடிஐ, டிப்ளமோ, 12ம் வகுப்பு முடித்தவர்கள் ஜன 31.க்குள் இங்கு <


