News August 5, 2024
அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்

ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பால் பெய்த கனமழையால், தேசிய நெடுஞ்சாலை சேதமடைந்துள்ளதால், அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சீரமைப்புப் பணிகள் நிறைவடையும் வரை, அச்சாலை மூடியிருக்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால், பனிலிங்க தரிசனம் செய்யமுடியாமல், பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இமாச்சலில் மேக வெடிப்பால் பாதிக்கப்பட்ட சிம்லா, குலு மாவட்டங்களில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
Similar News
News January 25, 2026
நோ காஸ்ட் EMI… எச்சரிக்கும் நிபுணர்கள்!

நம்மில் பலரும் ‘No Cost EMI’ மூலம் ஆன்லைனில் பொருட்களை வாங்கினால், வட்டி இருக்காது என நினைக்கிறோம். ஆனால், பொருட்களின் விலையில் வட்டி சேர்க்கப்பட்டுள்ளதாகவும், கூடுதலாக, செயலாக்க கட்டணம் + ஜிஎஸ்டியை வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டும் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் அதிக கால EMI காரணமாக, கடன் பயன்பாட்டு விகிதம் அதிகரித்து CIBIL ஸ்கோர் குறையலாம் எனவும் எச்சரிக்கின்றனர்.
News January 25, 2026
பாரதியார் பொன்மொழிகள்

*எந்த ஏற்றத்துக்கும் ஓர் இறக்கம் உண்டு; எந்த துன்பத்திற்கும் ஓர் இறுதி உண்டு; எந்த முயற்சிக்கும் ஒரு பலன் உண்டு. *விழும் வேகத்தை விட எழும் வேகம் அதிகமாக இருந்தால் தோற்கடிக்க அல்ல உன்னைப் பார்க்கவே எவனும் பயப்படுவான். *சொல்வது தெளிந்து சொல் செய்வது துணிந்து செய். *உள்ளத்தில் நேர்மையும் தைரியமும் இருந்தால் நடக்கும் பாதையும் நேரானதாகவே இருக்கும். *மனதில் உறுதி வேண்டும்.
News January 25, 2026
மனிதர்களை மிஞ்சும் ரோபோக்கள்: எலோன் மஸ்க்

டெஸ்லாவின் ‘ஆப்டிமஸ்’ ரோபோக்கள் 2027-ம் ஆண்டின் இறுதிக்குள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விற்பனைக்கு வரும் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார். டாவோஸில் பேசிய அவர், தற்போது தொழிற்சாலைகளில் எளிய பணிகளைச் செய்து வரும் இந்த ரோபோக்கள், விரைவில் மனிதர்களை மிஞ்சி வகையில் சிக்கலான வேலைகளையும் செய்யும் என்றும், விற்பனைக்கு வரும்போது, அவை மிக உயர்ந்த பாதுகாப்புடன் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.


