News August 5, 2024
தக்கோலம் ஜலநாதீஸ்வரர் கோவில் சிறப்புகள்

அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் அமைந்துள்ள ஜலநாதீஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.தொண்டை நாட்டுத் தலங்களில் 12 வது திருத்தலம். இத்தலத்தில் காமதேனு வழிபட்டதால் இங்கு செய்யும் சிவ புண்ணியம் ஒன்றுக்கு நூறு மடங்காக அதிகரிக்கும் என புராணம் கூறுகிறது. இக்கோவிலில் வழிபட்டால் பெண்களின் கர்ப்ப கால பிரச்ச்னைகள் தீரும் என்பது ஐதீகமாக உள்ளது.
Similar News
News March 12, 2026
வாலாஜா அருகே பரிதாப பலி!

ராணிப்பேட்டை: வாலாஜாபேட்டை தாலுகா கல்மேல்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கவுரி(48). கட்டுமானத் தொழிலாளியான இவர், நேற்று முன் தினம் வழக்கம் போல் பணிக்குச் சென்று விட்டு மாலை தனது உறவினருடன் பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அம்மூர், அள்ளிக்குளம் அருகே சென்ற போது தீடீரென பைக்கில் இருந்து மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்த போது, ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.
News March 12, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (மார்ச்- 11) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 11, 2026
ராணிப்பேட்டை: Spam Calls தொல்லையா? இனி கவலை இல்லை!

ராணிப்பேட்டை மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.


