News August 5, 2024

அனுமதியின்றி ராட்டினங்கள் அமைத்தால் கடும் நடவடிக்கை

image

திருப்பத்தூர் அருகே பசலிக்குட்டை முருகன் கோவிலில் நேற்று முன்தினம் ஆடிப்பெருக்கு விழா நடைபெற்றது. விழாவில் பொழுதுபோக்கிற்காக ராட்சத ராட்டினம் அமைக்கப்பட்டு இருந்தன. நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணி அளவில் அந்த ராட்டினம் சரிந்து விபத்து ஏற்பட்டது. இதன் எதிரொலியாக இனி ராட்டினங்கள் உரிய அனுமதியன்றி அமைக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News February 2, 2026

திருப்பத்தூர்: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

image

திருப்பத்தூர் மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘Fuel@Call’ என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 2, 2026

திருப்பத்தூர் அருகே துடிதுடித்து பலி

image

நாட்றம்பள்ளி அடுத்த பந்தாரப்பள்ளி ஊராட்சி டோல்கேட் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 3:30 மணியளவில் கோவையில் இருந்து சென்னைக்கு கோழி இறைச்சி ஏற்றுக்கொண்டு சென்ற மினி வேன் எதிரே சென்ற லாரி மீது இடித்ததில் மினி வேனில் கிளீனராக வேலை செய்த கோவையைச் சேர்ந்த அசாருதீன் என்பவர் துடிதுடித்து உயிரிழந்தார். விபத்து குறித்து நாட்றம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 2, 2026

திருப்பத்தூர்: இனி Whatsapp-ல் ஆதார் அட்டை!

image

திருப்பத்தூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது இங்கே <>கிளிக் <<>>செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!